இந்த நான்கு பொருளும் ஒன்றாக இருக்கும் இடத்தில் பணம் போதும் போதும் என்கிற அளவிற்கு சேர்ந்து கொண்டே இருக்கும். இதுவரை நீங்க கொடுத்து வராத பணமெல்லாம் கூட உங்களை வந்து சேரும்.

- Advertisement -

உலகம் முழுவதும் சுழல்வதே இந்த பணம் என்னும் இந்த காகிதத்தை மையமாக வைத்து தான். இந்த பூமியில் பணம் இல்லாமல் நாம் வாழ தான் முடியாது என்றால், பணமில்லை என்றால் சாகவும் கூட முடியாது. அந்த அளவிற்கு பணம் இந்த உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதனாலே தான் அனைவரும் பணத்தின் பின்னாலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியான இந்த பணத்தை சம்பாதிக்கவும், சம்பாதித்த பணம் நமக்கு நல்ல முறையில் கையில் தங்கவும், வீண்விரயங்கள் ஆகாமல் தடுக்கவும் சில பொருட்களை நாம் வீட்டில் வைத்து இருந்தால் பணவரவு தடையில்லாமல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு அதை எந்த வழியில் வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று கண்மூடித்தனமாக பலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி சம்பாதிக்கும் பணம் என்றைக்குமே கையில் தாங்காது. அது விரயங்களை தந்து கொண்டு தான் இருக்கும். இந்த பணத்தினால் அவர்கள் ஒரு நாளும் நிம்மதியாக வாழ முடியாது. நியாயமான முறையில் பணத்தை சம்பாதித்து அதை நல்ல வழியில் செலவழிக்க வேண்டும். இப்படி சம்பாதிக்கும் பணத்தை பலமடங்கு பெருக செய்ய சில பொருட்கள் நம் வீட்டில் இருந்தால் நல்லது என்று ஆன்மீகம் சொல்கிறது.

- Advertisement -

வீட்டில் பண வரவிற்கு வைக்க வேண்டிய பொருட்கள்:
இதில் முதலாவதாக நாம் வாங்க வேண்டியது விநாயகர் சிலை. நம்முடைய கட்டை விரல் அளவில் உள்ள விக்கிரகங்களை மட்டும் தான் வாங்க வேண்டும். அது பித்தளை,செம்பு, வெள்ளி இப்படி எந்த விநாயகர் சிலையாக இருந்தாலும் அதை வாங்கி பூஜையில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது இரண்டு யானைகள் ஒன்றை ஒன்று பார்ப்பது போல இருக்கும் பொம்மைகளை வாங்கி வைக்க வேண்டும். ஒரே ஒரு யானை மட்டும் இருக்கும் பொம்மையை வாங்கக் கூடாது. இந்த யானை பொம்மை பூஜை அறையில் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. உங்கள் வீட்டில் வரவேற்பறையில் கூட வைக்கலாம். இது வாஸ்து, கண் திருஷ்டி போன்றவற்றையெல்லாம் சரி செய்ய சிறந்த பரிகார முறைகளில் ஒன்றாகும்.

- Advertisement -

அடுத்தது ஒரு தட்டில் ஆமை வீட்டிற்கு உள்ளே வருவது போல் உள்ளதை வைக்க வேண்டும். இந்த ஆமை வெளியில் செல்வது போல வைக்க கூடாது. இதை வாங்கி வரவேற்பறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது பசுவும் கன்றும் ஒன்றாக இருப்பது போன்ற காமதேனு சிலை. இது பூஜை அறையிலும் வைக்கலாம் வரவேற்பறையிலும் வைக்கலாம். முப்பது முக்கோடி தேவர்கள் முதல் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்வதாக கோமாதா விளங்குகிறது. இந்த கோமாதா கன்றுடன் இருப்பது போன்ற சிலையை வீட்டில் வாங்கி வைப்பது அத்தனை விசேஷம்.

இதையும் படிக்கலாமே: இந்த பொட்டு மட்டும் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும் உங்கள் துணை உங்கள் பேச்சை கேட்க இனி மறுக்கவே மாட்டாங்க!

பணம் வர வேண்டும் என்றால் உழைக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உழைக்கும் பணம் நமக்கு சரியான முறையில் வந்து சுப செலவுகளாக மட்டுமே செலவழிந்து பணம் நம்மிடம் தங்கிப் பெருக வேண்டும். அதற்கான ஒரு சில பரிகாரங்களாக தான் இந்த பொருட்களை வீட்டில் நாம் வைக்கிறோம் . நம்பிக்கை உள்ளவர்கள் இவற்றை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -