வறுமை இல்லாத வாழ்வுக்கு வியாழன் கிழமையில் பூஜை அறையில் வைக்க வேண்டிய முக்கிய பொருள் என்ன? இத வச்சு வழிபட்டா வாழ்வில் வறுமையே வராதா?

kubera lakshmi
- Advertisement -

வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவரும் விரும்புகின்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது பற்றாக்குறையாகவே இருந்து விடுகிறது. இந்த பற்றாக்குறையை போக்கி வறுமையை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி நம் வீட்டில் இருக்கும் பூஜை அறைக்கு உண்டு. இந்த அறையில் வியாழன் கிழமையில் நீங்கள் இதை வைத்து வழிபட்டால் வறுமை வராது என்கிறது சாஸ்திரம். அந்த பொருள் என்ன? எப்படி வைத்து வழிபட வேண்டும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக குறிப்பாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீகத்தை பொறுத்தவரை எதையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தான் பலன் அளிக்கும். வெறும் கல்லாக பார்த்தால் அது கல் தான். கடவுளாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே அது கடவுளாக தெரியும். அது போல எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது தான் பலன் தரும். ஏதோ சொல்லிவிட்டோம், செய்கிறோம் என்று நம்பிக்கை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் செய்யாமலேயே இருக்கலாம்.

- Advertisement -

வறுமை நீங்க வியாழன் கிழமை கலச பரிகாரம் | Varumai neenga viyazhan kizhamai kalasa pariharam
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு பரிகாரத்தின் மீதும் நம்பிக்கை இருக்கும். இந்த பரிகாரத்தில் வைக்கப்படும் முக்கிய பொருளாக இருப்பது கலசம் மற்றும் ஊறுகாய் ஆகும். கலசம் மகாலட்சுமிக்கும், ஊறுகாய் குபேரனுக்கும் உகந்த ஒரு பொருளாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அந்த வகையில் நீங்கள் வியாழன் கிழமை தோறும் இந்த ஒரு பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள், உங்களுடைய வாழ்வில் வறுமை நீங்கி வளம் காணலாம்.

முதலில் ஒரு செம்பு அல்லது பித்தளை கலசம் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். எதுவுமே இல்லை என்றால் எச்சில் படாத எவர்சில்வர் செம்பு போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பூஜைக்கு என்று தனியாக வைத்திருக்க வேண்டும். இந்த செம்பு கலசத்தில் நீங்கள் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை முதலில் போட்டுக் கொள்ள வேண்டும். இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் இதை முதலில் சேர்க்கிறோம்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசியை சேர்க்க வேண்டும். பச்சரிசி எல்லாவிதமான பூஜை, பரிகாரங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருளாகும். பச்சரிசி இருக்கும் இடத்தில் வறுமை தாண்டவம் ஆடாது. இது மகாலட்சுமி மற்றும் அன்னபூரணியின் சொரூபமாக கருதப்படுகிறது. எனவே பரிகாரத்திற்கு மற்றும் பூஜைகளுக்கு பச்சரிசியை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். இவற்றுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்வு தித்திப்பாக இருக்கவும், சகல இருள் நீங்கி இனிப்பான மங்களகரமான குடும்ப ஒற்றுமைக்கும் வெல்லம் சேர்க்கப்படுகிறது. இவை எல்லாம் வைத்த பின்பு அதன் மீது ஐந்து ரூபாய் அல்லது ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வெள்ளிக்கிழமை பிறக்கவிருக்கும் மார்கழி முதல் தேதியில் இந்த 2 இலைகளை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டால், உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பஞ்சு பஞ்சாக பறந்து ஓடிவிடும்.

பூஜை அறையில் மகாலட்சுமி படம் மற்றும் குபேரன் படம் இருப்பது அவசியமாகும். இவர்களுக்கு முன்னிலையில் நீங்கள் இந்த கலசத்தை ஆவஹனம் செய்ய வேண்டும். பின்னர் ஒரு ஊறுகாயை சிறிய கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும். ஊறுகாய் இருக்கும் இடங்களில் வறுமை இருக்காது, குபேர சம்பத்து உண்டாகும் என்பது அனைவரும் அறிந்தது. ஊறுகாய் பிரியராக இருக்கக்கூடிய குபேரனுக்கு வியாழன் கிழமை உகந்ததாக இருப்பதால் இந்த கிழமையில் இதை செய்கிறோம். இவற்றை வைத்து நீங்கள் வழக்கம் போல குத்து விளக்கு அல்லது குபேர விளக்கு ஏற்றி சாதாரணமாக வழிபட்டு வந்தாலே போதும், உங்களுடைய வாழ்வில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அவை நீங்கி வறுமை இல்லாத வளமான ஒளிமயமான வாழ்வு அமையும். ஒவ்வொரு வாரம் இதை நீங்கள் செய்து வரும் பொழுது, உங்களுடைய பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதை நீங்கள் காணலாம். அது மட்டும் அல்லாமல் உங்களுடைய வருமானம் உயர ஆரம்பிக்கும். திறமை தட்டிப் பறிக்கப்படாமல், உங்களுக்கு வர வேண்டிய அதிர்ஷ்டங்களும், சலுகைகளும், லாபமும் வந்து சேரும்.

- Advertisement -