மனதில் நினைத்தபடி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டுமா? நிறைய வருமானம் வருவதற்கு எப்போதும் பர்ஸில் இந்த ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்.

bay-leaf
- Advertisement -

நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. மனதில் நினைப்போம். இன்று இந்த வேலையை செய்து, இந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று. ஆனால், அது நடக்காது. அடுத்த மாதம் எப்படியாவது இந்த வேலையை தொடங்கி விட வேண்டும். இந்த தொழிலை தொடங்கி விட வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அதுவும் நடக்காது. வருமானத்தை தேடி நாயாக அலைந்தாலும் வருமானம் கைக்கு வராது. முயற்சிகள் வெற்றி பெறாது. மிஞ்சியது கஷ்டம் மட்டும் தான். சோர்வு மட்டும்தான். மனதில் பணம் சம்பாதிக்க நிறைய ஆசை இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் நிறைவேற்றுவதற்கு தகுந்த நேரமும் காலமும் வர மாட்டேங்குது என்று வருத்தப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

நினைத்தபடி பணம் சம்பாதிக்க பரிகாரம்:
இதற்கு ஒரே தீர்வு பிரியாணி இலையால் தான் கொடுக்க முடியும். கொஞ்சம் நல்ல பிரியாணி இலையாக ஓரளவுக்கு பெரிய பிரியாணி இலையாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை இந்த பிரியாணி இலையில் எழுதுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு டெய்லர் தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த வேலை கிடைத்து வருமானம் பெற வேண்டும் என்று எழுதலாம். அதே போல வங்கி வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது ஏதாவது இன்டர்வியூக்கு செல்பவர்கள் அந்த கம்பெனியின் பெயரை எழுதி அந்த குறிப்பிட்ட வேலை கிடைத்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எழுதலாம்.

அதே போல சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை இருப்பவர்கள் அந்த சொந்த தொழிலின் பெயரை எழுதி அந்த தொழிலின் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று எழுதி, அந்த பிரியாணி இலையை உங்கள் கையோடு எப்போதும் வைத்திருக்க வேண்டும். (இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எழுதுங்கள். உங்களுக்குத் தகுந்த விஷயமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் எழுதி குழப்பிக் கொள்ளக் கூடாது).

- Advertisement -

கையோடு என்றால் பர்ஸில், ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இதை உங்களுடைய உடம்பில் ஒரசும்படி ஏதாவது ஒரு இடத்தில் வைக்க முடியும் என்றால் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பிரியாணி இலையில் நீங்கள் எழுதி இருக்கும் அந்த வரி கூடிய சீக்கிரம் பலித்து, நீங்கள் அதன் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க தொடங்கி விடுவீர்கள்.

இப்படி இந்த பிரியாணி இலையில் எழுதிய நல்ல விஷயம் நடக்கும் என்று மனதார நம்ப வேண்டும். இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் நீங்கள் அந்த பணம் சம்பாதிக்கக்கூடிய முயற்சியில் வெற்றி பெற்று விட்டீர்கள். உங்கள் கைக்கு வருமானம் வந்துவிட்டது என்று பாசிட்டிவாக நினைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அப்போது நிச்சயம் நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த பூச்செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. கேட்டதை கேட்ட வண்ணம் கொடுக்கும் அற்புத தெய்வ சக்தி கொண்டமலர்.

நீங்கள் விரும்பியபடி பணம் சம்பாதித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைவீர்கள். இது ஒரு எளிமையான ஆன்மீகம் பரிகாரம் தான். முழு நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் உண்டு.  ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றி அனைவரும் வாழ்வில் முன்னேற இறைவனை வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -