இந்த பூச்செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. கேட்டதை கேட்ட வண்ணம் கொடுக்கும் அற்புத தெய்வ சக்தி கொண்டமலர்.

murugan lady
- Advertisement -

பூக்கள் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது இரண்டு விஷயங்கள் தான் ஒன்று நாம் சூடி கொள்வது, மற்றொன்று தெய்வத்திற்கு சூட்டுவது இதில் தெய்வத்திற்கு சூட்டுவதை தான் பிரதானமாக பார்க்கிறோம். அந்த வகையில் ஒரு அற்புதமான தெய்வீக சக்தி மிகுந்த மலரை குறித்த தகவலை தான் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கேட்டதை அருளும் தெய்வீக மலர்:
இந்த பதிவில் நாம் செம்பருத்தி மலரை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். அதிலும் ஒற்றை இதழ் கொண்ட சிகப்பு செம்பருத்தி மலருக்கு மட்டுமே இந்த தெய்வீக தன்மை நிறைந்து உள்ளது. இதற்குக் காரணம் இதன் நிறமானது நம்முடைய மூலாதாரத்தில் நிறமாக பார்க்கப்படுகிறது. இந்த மலரை கொண்டு தான் நாம் நினைத்ததை எப்படி நிறைவேற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாகவே அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான ஒரு செடியாக இந்த செம்பருத்தி செடி பார்க்கப்படுகிறது. நம் வீட்டில் வைத்து வளர்த்து அதில் மலரும் செம்பருத்திப் பூவை வைத்து வணங்கும் பொழுது பலன் பல மடங்காக கிடைக்கும். ஆகையால் அனைவரும் கட்டாயமாக ஒரே ஒரு ஒற்றை செம்பருத்தி செடியாவது வீட்டில் வளர்க்க முயற்சி செய்யுங்கள். ஒரு வேளை நம் வீட்டில் இல்லை எனும் போது கடையில் பணம் கொடுத்து இந்த பூவை வாங்கிக் கொள்ளுங்கள்.

அடுத்தவர் வீட்டில் இருந்தோ அல்லது தெருவோரங்களில் இருக்கும் பூக்களையும் பறித்து வந்தோ இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது. ஒரு வேளை நீங்கள் அடுத்த வீட்டில் வாங்குகிறீர்கள் என்றால் பணம் கொடுத்து வாங்கி விடுங்கள். இனமாகவோ அவர்களுக்கு தெரியாமலோ வாங்கி வந்த மலரை கொண்டு பரிகாரம் செய்யும் பொழுது அதற்கான பலன் கிடைக்காது. இதற்கென அதிகமான மலர்களை வாங்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது ஒரே ஒரு மலர் கிடைத்தால் கூட போதும்.

- Advertisement -

இந்த செம்பருத்தி மலர்களை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்த பிறகு மலரின் இதழில் உங்களுடைய வேண்டுதலை எழுத வேண்டும். இதற்கு எந்த நிற பேனா வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதன் இதழ்கள் மிகவும் மிருதுவாக இருக்கும் எனவே எழுதும் போது கவனமாக எழுத வேண்டும். வேலை கிடைக்க வேண்டும் எனில் எனக்கு வேலை கிடைத்து விட்டது என எழுத வேண்டும். அதாவது உங்களுக்கு எது தேவையோ அது கிடைத்து விட்டதாக எழுத வேண்டும். இது ஒரு வகையில் பிரபஞ்ச ஈர்ப்பு விதியாகவும் நமக்கு செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஒரு மலரில் ஒரு வேண்டுதலை மட்டும் தான் எழுத வேண்டும். இந்த மலரில் எழுதிய பிறகு வேலை சம்பந்தமாக எழுதி இருந்தால் அதை முருகர் படத்திலும், பண வரவிற்காக எழுதியிருந்தால் மகாலட்சுமி தாயார் படத்திலும், படிப்பு தொடர்பாக எழுதி இருந்தால் சரஸ்வதி தாயார் படத்திற்கும் வைத்து விடுங்கள். இப்படி அந்தந்த வேண்டுதல் குரிய தெய்வங்களுக்கு நீங்கள் எழுதி மலரை வைத்து வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த தெய்வங்கள் உங்கள் கனவில் வந்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு மலரை வைத்து நம்முடைய வேண்டுதலை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள எளிமையான வழி. எந்த ஒரு வேண்டுதலையும் வழிபாடு பரிகாரம் எதுவாக இருப்பினும் அதை செய்யும் பொழுது முழு மனதோடும் முழுமையான நம்பிக்கையுடனும் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தையும் இதே முறையில் நம்பிக்கையுடன் செய்து அதற்கான முழு பலனை பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -