வெறும் 5 ரூபாயை பூஜை அறையில் இப்படி வைத்தால் போதும். 5 லட்ச ரூபாயை கூட சுலபமாக சம்பாதிக்கலாம்.

5-rupee-lakshmi
- Advertisement -

வெறும் ஐந்து ரூபாயை பூஜை அறையில் இப்படி வைத்தால் ஐந்து லட்சம் ரூபாய் கூட சீக்கிரமாக சம்பாதிக்கும் வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வெறும் 5 ரூபாயில் வைத்துக் கொண்டு, 5 லட்சம் ரூபாயை எப்படி சம்பாதிக்க முடியும். ஒரு சிறு தொழில் தொடங்க வேண்டும் என்றாலே இந்த காலத்தில் 5 லட்ச ரூபாய் பத்தாது. வெறும் ஐந்து ரூபாயை வைத்து நாம் என்னதான் செய்ய முடியும். முடியும். நம்பிக்கை இருந்தால் மலையைக் கூட மடுவாக்கலாம். மடுவை, மலையாக மாற்றலாம் என்று சொல்லுவார்கள். அதன் அடிப்படையில் இன்று ஆன்மீகத்தில் ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் பார்க்கப் போகின்றோம்.

சீக்கிரம் பணம் சம்பாதிக்க எளிமையான ஆன்மீக பரிகாரம்:
ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கண்ணாடி பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். சின்ன பவுல் இருந்தால் போதும். அந்த ஐந்து ரூபாய் மூழ்கும் அளவிற்கு பன்னீர் ஊற்ற வேண்டும். சுத்தமான பன்னீர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அந்த கண்ணாடி பவுலில் ஊற்றி ஐந்து ரூபாய் நாணயத்தை அதில் போட்டு, இந்த கிண்ணத்தை மகாலட்சுமி தாயின் பாதங்களில் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

48 நாட்கள் தொடர்ந்து இந்த ஐந்து ரூபாய் நாணயத்திற்கு பூஜை செய்து வர வேண்டும். உதிரி மல்லிகைப்பூ, வாசம் நிறைந்த மற்ற எந்த உதிரி பூவாக இருக்கட்டும் அதை நீங்கள் பூஜைக்காக பயன்படுத்தலாம். எனக்கு பூக்களே கிடைக்கவில்லை என்றால் குங்குமத்தை வைத்து அர்ச்சனை செய்யலாம். பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த சின்ன கிண்ணத்தை ஒரு பெரிய தட்டின் மேல் வைத்துவிட்டு, அந்த தட்டிற்கு மேலே புஷ்பங்களாலையோ அல்லது குங்குமத்தாலையோ நீங்கள் அர்ச்சனை செய்ய வேண்டும்.

‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி! போற்றி’, ஓம் மகாலட்சுமி தாயே வசி வசி வசியை நமஹ!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 108 முறையும் நிறைய புஷ்பங்கள், நிறைய குங்குமம் போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றால் 48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்ய வேண்டும் கொஞ்சமாக பூக்கள் கொஞ்சமாக குங்குமத்தை போட்டு அர்ச்சனையை முடித்துக் கொள்ளுங்கள். மந்திரத்தை மட்டும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். 108 முறை கட்டாயம் சொல்ல வேண்டும். 108 முறை க்கும் மேலே அதிகமாக மந்திரம் சொன்னால் தவறு கிடையாது. ஆனால் குறைய கூடாது.

- Advertisement -

இந்த மந்திர வார்த்தைகளுக்கு அந்தக் கிண்ணத்தில் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயமும் அந்த பன்னீரிலும் மகாலட்சுமி தாய் வந்து வசியம் ஆகிவிடுவாள். 48 நாட்கள் பூஜை முடித்த பின்பு அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இதை செய்தாலே போதும். உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராது. பெண்கள் இந்த பூஜையை செய்யும் பட்சத்தில் கட்டாயமாக 48 நாட்கள் தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வீட்டில் பூஜை செய்ய வேறு யாராவது இருந்தால் பூஜையை தொடர்ந்து செய்ய சொல்லலாம். சூழ்நிலை, பூஜை செய்வதற்கு வேறு யாருமே கிடையாது என்றால் அந்த ஐந்து நாட்களை தவிர்த்து விட்டு மீண்டும் நீங்கள் பூஜையை தொடரலாம். அதில் எந்த தவறும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: எப்பேர்ப்பட்ட துன்பத்தில் நீங்கள் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து சுலபமாக வெளி வர புதன் கிழமையில் இந்த தீபத்தை ஏற்றினால் போதும். மலை போல் வந்த துன்பம் கூட பனி போல் கரைந்து காணாமல் போய் விடும்.

இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை பீரோவில் வைத்துவிட்டு எதுவுமே செய்யவில்லை என்றால் பணம் உங்களை தேடி வருமா. நிச்சயம் வராது. கஷ்டப்படணும், பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்யணும். எப்படியாவது ஐந்து வருடத்தில் ஐந்து லட்சத்தை சேமித்தே ஆக வேண்டும் என்ற தேடுதலை தொடங்குங்கள். அந்த தேடுதலில் தடைகள் வரும். துன்பங்கள் வரும். பல பல பிரச்சனைகள் வரும் அல்லவா. அதை எல்லாம் துவம்சம் செய்து விட்டு பணத்தை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வரும் வேலையை அந்த ஐந்து ரூபாயையும், அந்த ஐந்து ரூபாயில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தாயும் செய்வாள். அதற்காகத்தான் இந்த பரிகாரம் நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தை ஒரு வெள்ளிக்கிழமையில் தொடங்கலாம். முயற்சி செய்து பாருங்கள் வெற்றி உங்கள் பக்கம்.

- Advertisement -