வறுமையை விரட்டி அடிக்க, வரவு அதிகரிக்க, மசாலா பெட்டி ரகசியம் உங்களுக்காக. பெண்கள் இந்த சூட்சுமத்தை தெரிந்து கொண்டால் வீட்டில் இருக்கும் வறுமையை அடித்து விரட்டலாம்.

ammikkal1
- Advertisement -

வறுமையை விரட்டி அடிக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் ஏகப்பட்ட பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. பரிகாரத்தை மட்டும் செய்து விட்டால் நிச்சயமாக பலன் கிடைக்காது. பரிகாரத்தோடு சேர்த்து நம்முடைய உழைப்பையும் விடாமுயற்சியையும் முதலீடாக போட வேண்டும். நாம் போட்ட உழைப்பு வீண் போகாமல் இருக்க, நாம் எடுத்த முயற்சிகளில் தடை வராமல் இருக்க தான் பரிகாரங்கள். அந்த வரிசையில் நம் வீட்டில் வறுமை குடியிருக்கக்கூடாது. வருமானம் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்றால் வீட்டில் இந்த மாற்றங்களை கொண்டு வந்து பாருங்கள். நிச்சயமாக வருமானம் வந்துகொண்டே இருக்கும். வறுமை வீட்டு வாசல்படியை கூட நெருங்க முடியாது.

cash

ஆண்கள் தானே பணத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து வீட்டில் கொடுக்கிறார்கள். பெண்களுக்கு எதற்கு பரிகாரங்கள் என்று சிந்திக்காதீர்கள். ஆண்கள் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இன்றைய சூழ்நிலைக்கு ஆண்களும் பெண்களும் சரிசமமாக பணத்தை சம்பாதித்தாலும், வீட்டிலிருக்கும் பண பிரச்சனையை சரிசெய்வது என்பது மிக மிக கடினமாக உள்ளது. ஆண்கள் சம்பாதிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களும் தங்களால் முயன்ற அளவு முயற்சிகளை எடுத்து, தங்களால் முடிந்த வேலைகளை செய்து, பணம் சம்பாதிக்க வேண்டும்.

- Advertisement -

ஆண்கள் சம்பாதித்த பணமாக இருந்தாலும் சரி, பெண்கள் சம்பாதித்த பணமாக இருந்தாலும் சரி, அந்த வருமானத்தை வைத்து ஒரு குடும்பத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்லும் திறமையும் பொறுப்பும் பெண்கள் இடத்தில் தான் உள்ளது. வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை பெண்கள் இடத்தில் தான் உள்ளது. இதன் அடிப்படையில்தான் பின் வரக்கூடிய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பணத்தை ஈர்க்கக்கூடிய வாசனை நிறைந்த பொருட்களின் பட்டியலில் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, இவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றது. நாமே நிறைய பரிகாரங்களை இந்த பொருளை வைத்து பார்த்திருக்கின்றோம். இதனடிப்படையில் சமையலறையில் இந்த பிரியாணி சம்பந்தப்பட்ட மசாலா பொருட்களை பச்சை நிற டப்பாவில் போட்டு வையுங்கள். இது உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். பச்சை நிற டப்பாவில் இந்த பொருட்களை போட முடியவில்லையா? ஒரு சிறிய பச்சை துணியில் ஒரு பட்டை, ஒரு லவங்கம், ஒரு பிரியாணி இலை, இந்த மூன்று பொருட்களையும் சிறிய முடிச்சாக போட்டு பணப்பெட்டியில் வைத்தாலும் நல்ல மாற்றங்கள் தெரியும்.

- Advertisement -

அந்தக் காலத்தில் ஆட்டுக்கல் அம்மிக்கல் இல்லாத அடுப்பங்கரையே இருக்காது. பெரும்பாலும் இன்று ஆட்டுக் கல் அம்மிக் கல்லுக்கு பதிலாக நாம் மிக்சி கிரைண்டரை பயன்படுத்தி வருகின்றோம். இருப்பினும் பரவாயில்லை. இப்போது சிறிய அளவில் கருங்கல்லினால் செய்யப்பட்ட ஊரல், அம்மிக்கல் கிடைக்கின்றது. அதை வாங்கி சமையலறையில் விழுது அரைப்பதற்கு என்று பயன்படுத்தி பாருங்கள். இது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

ammikkal

வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவில் இருக்கும் அம்மிக்கல்லுக்கும், ஆட்டுக்கல்லும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, தொட்டு உங்களுடைய கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். எந்த ஒரு உலோகத்தை விடவும் மிக மிக வலிமையானது கல். மற்ற உலோகங்களை போல கல்லை வளைக்கவும் முடியாது. நெருப்பில் போட்டு உருக்கவும் முடியாது. இதனால் தான் திருமண சடங்கின் போது பெண்ணினுடைய வலது காலை தூக்கி, அம்மி கல்லின் மேல் வைத்து, இல்லற வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும், பெண்ணினுடைய மனது எப்போதும் இந்தக் கல் போல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மி மிதிக்கக் கூடிய சடங்கை நம்முடைய முன்னோர்கள் கொண்டு வந்தார்கள்.

ammi midhithu

தொடர்ந்து இந்த அம்மி கல்லை வீட்டில் இருக்கும் பெண்கள் வழிபாடு செய்து வரும்போது, அந்தப் பெண்ணினுடைய மனது அம்மிக்கல் போல உறுதியடையும். வீட்டில் வரும் கஷ்ட நஷ்டங்களை எதிர் கொண்டு வீட்டை எப்படி வழி நடத்திச் செல்லவேண்டும் என்ற பக்குவம் அவர்களுக்கு கிடைத்து விடும். வருமானம் அதிகமாக வரும்போதும் சரி, வருமானம் சிலசமயங்களில் ஏற்ற இறக்கத்தோடு வரும்போதும் சரி, உறுதியான மனதோடு தன்னம்பிக்கையோடு, குடும்பத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய பெணின் மனது கல்லை போல உறுதியோடு இருந்தால், கஷ்ட காலத்தில் கூட வீட்டுப்பக்கம் எப்போதுமே வறுமை தலை வைத்துப்படுக்காது. நீங்க வேணும்னா இத ட்ரை பண்ணி பாருங்க. உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு மாற்றம் வருவதை உணர்வீர்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -