பணக்கஷ்டம் நீங்கி பணவரவு ஏராளமாக வர இருக்க அரச மரத்தடியில் நின்று இந்த ஒரு வார்த்தையை சொன்னால் போதும். ஆண்டியையும் அரசனாக்கும் அற்புத அரச மர பரிகாரம்.

sivan cash
- Advertisement -

பணம் பணம் என்று பணத்தின் பின்னாடி ஓடும் நாம் அதை சம்பாதிக்க இரவும் பகலும் பாடப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்ன தான் பாடுபட்டு உரைத்தாலும் கூட நம்மால் வேண்டிய பணத்தை ஈட்ட முடிவதில்லை. சில நேரங்களில் வந்த பணமும் தங்குவதில்லை. இப்படி பணம் நம் கையில் புழங்காமல் இருந்தால் நாம் நிச்சயம் பணக்கஷ்டத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க ஆன்மீகம் எளிய பரிகார முறைகளை நமக்கு தந்திருக்கிறது. அவற்றில் ஒரு பரிகார முறையை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு திங்கட்கிழமை உகந்த நாளாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த பரிகாரத்தை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். அதன் பிறகு செய்யும் போது இந்த பரிகாரத்திற்கு அவ்வளவு பலன் கிடையாது. இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

பணம் கையில் தாராளமாக புழங்க பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு திங்கள்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, கையில் சிறிதளவு காய்ச்சாத பாலையையும் ஒரே ஒரு ஸ்பூன் அளவு அரிசி, ஒரு அகல் விளக்கு, நெய், பஞ்சு திரி இவை அனைத்தையும் எடுத்து கொண்டு உங்கள் வீட்டில் அருகில் அரச மரம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு மரத்தடியில் நின்று கொண்டு சென்ற பொருள்களில் இருந்து இந்த பாலை மட்டும் எடுத்து உங்கள் கையில் வைத்து மேலே கை வைத்து மூடி ஹீரீம் என்ற இந்த மந்திரத்தை 5 நிமிடம் வரை சொல்லுங்கள்.

அதன் பிறகு இந்தப் பாலை அரச மரத்தின் வேரில் ஊற்றி விட்டு தொட்டு வணங்கிய பிறகு, அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள். ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு முன்பாக நீங்கள் கொண்டு சென்றிருக்கும் அகல்விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து சிவபெருமானை வணங்கிய பிறகு, உங்கள் கையில் இருக்கும் அரிசியை சிவபெருமான் மீது அர்ச்சனை செய்வது போல போட வேண்டும். அப்படி போட முடியாத பட்சத்தில் சிவலிங்கத்திற்கு அருகிலாவது அந்த அரிசியை வைத்து விட்டு உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் பணத்தடை அனைத்தும் நீங்கி பணவரவு தாராளமாக இருக்க வேண்டும் என்று சிவபெருமானையும் வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து 41 நாட்கள் செய்ய வேண்டும். அதே போல முதல் நாள் எந்த நேரத்தில் செய்கிறீர்களோ அதே நேரத்தில் தான் செய்ய வேண்டும் நேரமும் தவிர கூடாது. இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள்ளாகவே உங்களுக்கு இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவிற்கான வழிகள் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடன் சுமையும் காணாமல் போக கந்தக் கடவுளுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். கடன் சுமையானது கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போய் விடும்.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நம்பிக்கை மிகவும் முக்கியம். அதே போல இந்த பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் பரிகாரத்தை செய்து பணவரவிற்கான எந்த ஒரு முயற்சியும், தொழிலும் எதுவாக இருந்தாலும் தொடங்குங்கள். நிச்சயம் அதில் பல மடங்கு வெற்றி கிடைத்து உங்கள் பணப்பிரச்சனை அனைத்தும் நீங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -