கடன் தீர அரச மர வழிபாடு

kadan theera
- Advertisement -

கடன் என்பது சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி அது எப்போதுமே ஒரு சுமை தான். அவரவர் வருமானத்திற்கு ஏற்ப அல்லது அவரவர் நிலைக்கேற்ப கடன் இருக்குமே அன்றி கடன் இல்லாமல் இருப்பவர் மிகவும் குறைவு. இந்த கடனால் துன்பப்படுபவர்கள் நிலையை வெறும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அவர்கள் எப்போதுமே பெரும் துயரில் தான் எப்பொழுதும் உழன்று கொண்டு இருப்பார்கள்.

அதிலும் கடனை சரியாக திருப்பிக் கொடுப்பவர்கள் நிலைமை கூட ஓரளவுக்கு பரவாயில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி தர முடியாமல் கஷ்டப்படுபவர்கள் நிலை படுமோசம் தான். எந்த நேரத்தில் கடன்காரர்கள் வருவார்களோ என்று பயத்துடனே வாழ்வது நரக வாழ்க்கைக்கு சமம். இந்த கொடுமையான கடன் தொல்லை தீர எளிமையான இந்த வழிபாட்டு முறையை செய்யலாம்.

- Advertisement -

கடன் தீர எத்தனை வழிபாடு முறைகள் இருந்தாலும் அரச மர வழிபாடு எப்போதுமே சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பொதுவாக அரச மரத்தை சனிக்கிழமை அன்று வணங்குவது கடன் தீருவதற்கான வாய்ப்பை தரும். அதே அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபடும் போது கடன் தீருவதுடன் வருமானமும் பல மடங்கு பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர்ந்து பணம் வர பரிகாரம்

இந்த பரிகாரம் மேலே சொன்னது போல ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள்ளாக எப்போது வேண்டுமானாலும் இதை செய்யலாம். ஆனால் அன்று செய்ய முடிவு செய்து விட்டால் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். இது மட்டும் தான் இந்த பரிகாரத்திற்கு உள்ள விதிமுறை.

- Advertisement -

இதை செய்வதற்கு உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி தாயார் படம் அல்லது சிலை எதுவாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு அகல் தீபம் ஏற்ற வேண்டும் அதற்கு தேவையானவற்றையும் எடுத்து கொள்ளுங்கள்.அதன் பிறகு வீட்டின் அருகில் இருக்கும் அரச மரத்தடியில் இந்த படத்தையோ அல்லது சிலையோ வைத்து அதன் முன்பாக ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். பின்னர் அரச மரத்தை 27 முறை சுற்றி வர வேண்டும்.

இப்படி சுற்றும் போது யாரிடமும் எதுவும் பேசக் கூடாது. உங்களின் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும் என்பதில் மட்டும் தான் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கடன் மட்டும் இன்றி உங்களுக்கு வரவேண்டிய தொகையோ அல்லது பணத்தேவை எதுவாக இருப்பினும் அதை நினைத்து சுற்றுங்கள்.

- Advertisement -

27 முறை சுற்றிய பிறகு அரச மரத்தை தொட்டு வணங்கி பிறகு இந்த லட்சுமி தாயார் படம் அல்லது சிலையோ எடுத்துக் கொண்டு நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள். இந்த பரிகார முறையை ஞாயிற்றுக்கிழமை நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து கொண்டே வந்தால் கடன்கள் வெகு சீக்கிரம் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதோடு பல மடங்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் தானாக உங்களைத் தேடி வர பரிகாரம்

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையோடு இதை செய்து கடனை அடைவதற்கான முயற்சியும் வருமானத்தை ஈட்டுவதற்கான நடவடிக்கையும் துணிவுடன் மேற்கொள்ளுங்கள். நிச்சயம் பல மடங்கு பலனை பெற இந்த பரிகாரம் உதவி செய்யும்.

- Advertisement -