பணம் தானாக உங்களைத் தேடி வர பரிகாரம்

cash2
- Advertisement -

தீபாவளி என்று மட்டும் கிடையாதுங்க. எந்த ஒரு பண்டிகை நாளாக இருந்தாலும், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு புத்தாடை எடுக்க, மற்ற பொருட்கள் வாங்க, குறிப்பாக தீபாவளி என்றால் நிறைய பட்டாசு வாங்க, செலவு கொஞ்சம் ஆகத்தான் செய்யும். அந்த சமயத்தில் நம் கைக்கு எதிர்பாராத பணவரவு வந்தால் நிச்சயம் குடும்ப தலைவராக இருந்தாலும் சரி, குடும்ப தலைவியாக இருந்தாலும் சரி, சந்தோஷப்படத்தான் செய்வார்கள்.

உங்களுக்கும் தீபாவளிக்கு பணத்தேவை நிச்சயம் இருக்கும். உங்களுக்கான பண வரவு அதிகரிக்க வேண்டுமா. பணம் தானாக உங்கள் பர்ஸை தேடி வர வேண்டுமா. எவ்வளவு பணம் வேண்டும் உங்களுக்கு. பிரபஞ்சத்திடம் இப்படி கேளுங்கள். நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கையோடு பின் சொல்லக்கூடிய ஆன்மீகம் சார்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால்.

- Advertisement -

பணத்தைக் காந்தம் போல இருக்கும் மந்திரம்

இந்த பரிகாரத்தை இன்று தொடங்கி தீபாவளி வரை செய்யுங்கள். அதற்கு பிறகு செய்தாலும் தவறு கிடையாது. பணம் உங்களை நோக்கி வந்து கொண்டே தான் இருக்கும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்துக்கோங்க. சூரிய உதயத்திற்கு முன்பு இந்த வேண்டுதலை வைத்து விட வேண்டும். பிரபஞ்சத்திடம் சூரிய உதயத்துக்கு முன்பு நீங்கள் வைக்கும் வேண்டுதல் உடனடியாக பலிக்கும் இதை முதலில் நீங்க நம்பனும்.

காலையிலேயே பரிகாரத்தை செய்வதற்கு முன்பு குளிப்பது சிறப்பு. கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து, உங்களுடைய கைகளில் இந்த முத்திரையை வைத்துக் கொள்ளுங்கள். மேலே புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். கட்டை விரல், நடுவிரல் இரண்டையும் சேர்த்து ஆகாயத்தை நோக்கியபடி இந்த முத்திரை இருக்க வேண்டும். இரண்டு கைகளில் இந்த முத்திரை இருக்கணும்.

- Advertisement -

பணம் வேண்டும், பணம் வேண்டும், பணம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இந்த முத்திரையை பிடியுங்கள். உங்களுடைய தேவைக்கு ஏற்ப பணத்தை நீங்கள் பிரபஞ்சத்திடம் கேட்கலாம். ஒரு கோடி வேண்டும் என்று கேட்க வேண்டாம். தகுதிக்கு ஏற்றவாறு கேளுங்கள். 10,000 ரூபாய் வேண்டும் 20,000 வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லது. பேராசை வேண்டாம்.

பிறகு ‘ஸ்ரீ தனயந்த்ர வர வர ஸ்வாஹா’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். பணம் உங்களை நோக்கி காந்தம் போல ஈர்த்து வரத் தொடங்கி விடும். ஆனால் எதையுமே செய்யாமல் பணம் நம் கைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நீங்கள் செய்யக்கூடிய வேலையில் உங்களுக்கு போனஸ் வராமல் இருக்கலாம், அல்லது உங்கள் கைக்கு வரக்கூடிய பணம் வராமல் தடையாக நிற்கலாம்.

- Advertisement -

இப்படி ஏதாவது ஒரு வகையில் பணத்தடை உங்களுக்கு நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் அந்த பணத்தடை உடைவதற்கு இந்த பரிகாரம் கை கொடுக்கும். எனக்கு வேலையே இல்லை. பணம் காசு வருவதற்கு வழியே இல்லை. நான் இதை செய்தால் என்ன நடக்கும். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதன் மூலம் வரக்கூடிய பணத்தை வைத்து நீங்கள் அடுத்தடுத்த மாதம் சந்தோஷமாக உங்கள் நாட்களை கழிப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: முருகனின் இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் நினைத்தது நடக்கும்.

அவசர தேவைக்கு செலவு செய்ய பணம் வேண்டும் என்பவர்கள் தொடர்ந்து 11 நாட்கள் இந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்து பாருங்கள். அதோடு நிறுத்திராதீங்க 27 நாள், 48 நாள் என்று நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த மந்திரம் உங்களுக்கு சித்தியாகி பணவரவு உங்களை தொடர்ந்து வந்து அடைந்து கொண்டே இருக்கும் என்பதுதான் நம்பிக்கை. மேல சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -