செல்வம் பெருக கல் உப்பு பரிகாரம்

kal uppu cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணத்தின் தேவையானது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாத வாழ்க்கை நரக வாழ்க்கை என்ற சூழ்நிலைக்கு காலம் நம்மை நகர்த்தி சென்று விட்டது. இப்படி இருக்கையில் அந்த பணவரவை அதிகரித்துக் கொள்ள நாம் உழைப்புடன் சேர்த்து சில தாந்திரீக வழிகளை பின்பற்றும் போது நம்முடைய முயற்சிகள் சீக்கிரத்தில் பலன் கிடைக்கும்என்று நம்பப்படுகிறது.

அப்படி ஒரு பண வரவை ஈர்க்கக் கூடிய எளிமையான தாந்திரீக முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த தாந்திரீக முறையை பின்பற்றுவதன் மூலம் பண ஈர்ப்பு அதிகரித்து வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த முறையை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணவரவை அதிகரிக்க உப்பு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு தேவையான முக்கியமான பொருள் எனில் அது கல் உப்பு தான். கல் உப்பு இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அது ஐஸ்வரியம் நிறைந்த பொருள். அது மட்டுமின்றி அது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி நல்ல நேர்மறை ஆற்றலை கொண்டு வரக்கூடிய சக்தி கொண்டது இப்படி கல் உப்பை பற்றி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். அப்படியான கல் உப்பை ஒரு பவுலில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு வீட்டில் இருக்கும் முட்டை பயன்படுத்தக் கூடாது கடையிலிருந்து புதிதாக வாங்கி வந்து அதை தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இத்துடன் நாட்டு மருந்து கடைகளில் வால் மிளகு என்று கேட்டால் தருவார்கள். அதை வாங்கி சிறிதளவு இந்த கல்லுப்பின் மீது வைத்து விடுங்கள. இத்துடன் நாம் வைக்க வேண்டிய பொருள் தான் பண இருப்பிற்கு முக்கியமான பொருள். அது நாயுருவி செடியின் வேர் தான். இந்த செடியில் பல வகைகள் உண்டு. அதில் எது கிடைத்தாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

அந்தச் செடியை ஒரு வெள்ளிக்கிழமை அன்று வேருடன் எடுக்க வேண்டும். எடுத்து வந்த செடியின் வேரை தனியாக நறுக்கி எடுக்க வேண்டும். இதற்கு இரும்பை பயன்படுத்தாமல் இந்தச் செடியை கல் வைத்து நறுக்கி வேரை தனியாக எடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியம் இரும்பு பட்டு விட்டால் இதற்குள்ள சக்தி செயல் இழந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த வேரை கல்லுப்பு மிளகு போட்டு வைத்திருக்கும் அந்த பவுலில் யார் கண்ணிலும் படாதவாறு மறைத்து வைத்து விட வேண்டும் . அதன் பிறகு இந்த பவுலை உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள் அல்லது பூஜையறை சமையலறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். படுக்கை அறையில் மட்டும் இதை வைக்கக் கூடாது.

இந்தக் கல்லு உப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும். அப்படி மாற்றும் போது வேரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை மறுபடியும் பயன்படுத்தலாம். கல் உப்பையும் வால் மிளகையும் மட்டும் கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிதாக இது போல மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். வேர் எடுக்கும் நாள் தான் வெள்ளிக்கிழமை. மற்ற படி இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க நிலைவாசல் பரிகாரம்

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி நேர்மறை ஆற்றலை கொண்டு வந்து பண ஈர்ப்பை அதிகரித்துக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது இந்த தாந்திரீக பரிகாரம். பண வரவிற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணம் ஈர்ப்பு அதிகரித்துக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -