பணவரவிற்காக பூஜையறையில் இந்த கடவுளை வைத்து வாங்க கூடாதாம் தெரியுமா?. இந்த வழிபாட்டை உங்கள் இல்லங்களில் செய்து கொண்டு இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்

lashmi kuberar cash
- Advertisement -

இன்று பண தேவைக்காக நாம் எவ்வளவோ பாடுபட்டு கொண்டிருக்கிறோம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இன்று அனைவரும் பண பிரச்சனையை தீர்க்க வழி தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த பண வரவிற்கு என நாம் செய்யும் வழிபாடுகளில் ஒரு சிலவற்றை நாம் செய்யும் தவறாக ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் பண வரவுக்காக நிறைய வாஸ்து பொருட்கள், செடிகள் போன்றவற்றை வளர்க்க தொடங்கி விட்டோம். அந்த வகையில் பணவரவிற்கு என முக்கியமாக அனைவரும் வாங்குவது இந்த லாபிங் புத்தா. இந்த லாபிங் புத்தாவை சீனர்கள் பண வரவிற்காக வைத்து வணங்கி வருகிறார்கள். தற்போது நாமும் இந்த வழிப்பாட்டை செய்ய துவங்கி விட்டோம். இந்த வழிபாட்டை தான் நாம் செய்யக் கூடாது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சீனர்களால் வணங்கப்படும் இந்த லாபிங் புத்தா என்பவர் வேறு, நாம் வணங்க கூடிய குபேரர் என்பவர் வேறு. இருவறையும் ஒரே மாதிரி பாவிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் இந்த லாபிங் புத்தாவை நாம் வைக்கக் கூடாதா? என்றால் அவரை நம் வீட்டில் வாஸ்துவிற்காக வைக்கலாம்.

இந்த லாபிங் புத்தாவை வாஸ்துவிற்காக வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் பூஜை அறையில் வைத்து வணங்கக் கூடாது. இந்த லாபிங் புத்தாவை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பார்ப்பது போல வைப்பது மிகவும் சிறந்தது. அப்படி வைக்கும் போது கொஞ்சம் சில்லறை காசுகளை பன்னீரில் அலசி ஒரு கண்ணாடி பவுலில் போட்டு அதன் மேல் ஒரு பூவையும் வைத்து விடுங்கள். இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் தேடித் தரும். ஆனால் இந்த லாபிங் புத்தாவிற்கு முன்பு தீபம் ஏற்றி வழிபடுவதை எந்த காரணம் கொண்டும் நாம் செய்யக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அப்படியானால் நாம் பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டிய குபேரர் யார் என்று உங்களுக்கு கேள்வி எழலாம். நம்முடைய பண தேவைக்கு லட்சுமி குபேரரை தான் பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். பூஜை அறையில் லட்சுமி குபேரர் படம் அல்லது சிலையை இரண்டில் எது வேண்டுமானாலும் வைத்து வணங்கலாம்.

இவர்களை வைத்து வணங்கும் பொழுது வெள்ளிக் கிழமையில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு பால் பாயாசத்தை நெய் வைத்தியமாக வைத்து வணங்க வேண்டும். இப்படி செய்வதின் மூலம் நம் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த செடிகள் எல்லாம் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் எங்கிருந்து வரும் என்றே தெரியாதாம்! அவ்வளவு நல்லதாம் தெரியுமா?

குபேரர், லாபிங் புத்தா இருவருரையும் வணங்க வேண்டிய முறைகளையும் எங்கு வைத்து வணங்க வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியாக இருந்திருக்கும். இவர்களை வணங்க வேண்டிய முறையில் வணங்கி நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

- Advertisement -