சுக்கிர திசை அடித்தது போல பணம் கட்டு கட்டாக உங்களிடம் வந்து சேர்ந்தது கொண்டே இருக்க நீங்கள் வைத்திருக்கும் பணத்தில் இதை மட்டும் தடவி வைத்து விடுங்கள்.

cash mahalkshmi
- Advertisement -

இந்த பணத்தை எப்படியாவது பாடுபட்டு சம்பாதித்து சேர்த்து விட வேண்டும் என நினைத்து தான் ஒவ்வொரு மனிதனும் காலை முதல் இரவு வரை ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஓடும் அனைவரிடமும் பணம் சேர்ந்து இருக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது. நாம் என்ன தான் பாடுபட்டு உழைத்தாலும் கூட பணம் நம்மிடம் தங்குவதற்கான யோகம் நமக்கு நிச்சயம் தேவை. அப்படியான யோகத்தை தரக் கூடிய ஒரு அருமையான பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பணத்தை சம்பாதித்து சேமிப்பது எத்தனை பெரிய காரியம் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனாலும் சம்பாதித்த பணத்தை நாம் தேக்க கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பணமானது புழக்கத்தில் இருந்தால் தான் அது பெருகும். பலரும் பணத்தை கையில் வைத்து அப்படியே தேக்கி விடுகிறார்கள். இதனால் பணம் பெறுக வாய்ப்பு குறைவு. உங்களிடம் இருக்கும் பணத்தில் ஒரு ரூபாய் எனினும் நல்ல முறையில் நல்ல செலவுகளுக்கு செய்து பழகுங்கள் அந்த பணம் நிச்சயம் இரட்டிப்பாக உங்களிடம் வந்து சேரும்.

- Advertisement -

பணம் சேர பரிகாரம்
இந்த பரிகாரத்தை செய்ய வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை மிகவும் சிறந்த நேரம். அது மட்டும் இன்றி பௌர்ணமி அமாவாசை போன்ற தினங்களிலும் செய்வதென்றால் செய்து கொள்ளலாம். அதுவும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். இதை தவிர மற்ற நாட்களில் செய்வதாக இருந்தால் வளர்பிறை திதியாக பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த பரிகாரம் செய்யும் நாளில் அவர்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பரிகாரத்தை செய்யலாம்.

இந்த பரிகாரத்திற்கு நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் லவங்க பட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இது புதிதாக வாங்கியதாக இருந்தால் அதை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் கடையில் புதிதாக வாங்கி பயன்படுத்துங்கள். அதை நன்றாக தூள் செய்து கொள்ளுங்கள் அடுத்து உங்களிடம் இருக்கும் ஏதேனும் ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ரூபாய் நோட்டிற்கு உள்புறம் வெளிப்புறம் என இரண்டு புறம் இருக்கும். அதில் உள்புறம் லேசாக அரஜகாவை தேய்த்த பிறகு இந்த லவங்க பட்டை பொடியை மேலே தூவி விட்டால் அது அப்படியே ஒட்டிக் கொள்ளும்.

- Advertisement -

இந்த நோட்டை நன்றாக மடித்து மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வணங்கிய பிறகு இதை எடுத்து நீங்கள் பரிசல்அல்லது வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். இந்த நோட்டை செலவு செய்யக் கூடாது இது மிகவும் முக்கியம். இது இருக்கும் இடத்தில் பண வரவானது அதிகரித்துக் கொண்டே இருக்கும். அந்த லவங்கப்பட்டை உடன் ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் போன்றவற்றையும் பொடி செய்து சேர்க்கலாம் இவை அனைத்துமே சுக்கிர வசியம் செய்யக்கூடிய பொருள்களாகவும் உள்ளது.

பணம் நாம் என்ன தான் சம்பாதித்து சேர்த்து வைத்தாலும் அதை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு சுக்கிரன் அனுகிரகம் தேவை. ஆகவே பண வரவிற்காக நாம் மகாலட்சுமி தாயாரை வேண்டினாலும் சுக்கிர பகவானின் அனுகிரகம் இருந்தால் தான் அதை நல்ல முறையில் நாம் அனுபவித்து பல மடங்கு பெருக்கிக் கொள்ள முடியும் ஆகவே இந்த பரிகாரத்தின் மூலம் இருவரின் அனுகிரகமும் கிடைத்து பணவரவு பல மடங்கு பெருகும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் வீட்டில் அடிக்கடி பால் திரிந்து போகிறதா பலன் என்ன? பால் பொங்கி வழிந்தாலும், திரிந்து போனாலும் நடக்கக்கூடிய விபரீதங்கள் என்னென்ன?

இந்த பரிகார முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பணத்தை பல மடங்கு பெருக்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆன்மீக பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -