தினமும் பணமழையில் நனைய மகாலட்சுமி தாயாரின் ஒரு வரி மந்திரம்.

mahalakshmi manthiram
- Advertisement -

நாம் அனைவரும் நாள் முழுவதும் பாடுபட்டு உழைப்பது, நாளெல்லாம் அலைந்து திரிவது எல்லாமே பணத்திற்காக தான். எப்பாடு பட்டாவது பணத்தை சம்பாதித்து சேர்க்க வேண்டும். இதன் மூலம் நாமும் நம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொருவருடைய எண்ணமாக இருக்கிறது. அப்படி பாடுபட்டு உழைப்பவர்கள் எல்லாம் பணம் சேர்த்து பணக்காரர்களாக இருக்கிறார்களா? அது நிச்சயம் சந்தேகம் தான்.

அப்படியானால் பணத்தை சம்பாதிக்க என்ன வழி என்று கேட்கலாம். முதலில் பணத்தை சம்பாதிக்க அதற்கான உழைப்பையும் முயற்சியும் நாம் சரிவர எடுக்க வேண்டும். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைந்து பணவரவு அதிகரிக்க ஒரு சில தாந்த்ரீக பரிகாரங்கள் உள்ளது. அதை பற்றி மந்திரம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பண வரவு அதிகரிக்க மந்திரம்

பணம் நம்மை நோக்கி வரவேண்டும் எனில் முதலில் பணத்தை ஈர்க்கும் தன்மை நமக்கு வேண்டும். அதே போல இந்த பணத்தை ஈர்ப்பதற்கான தன்மையும் இருந்தால் தான் பணம் நம்மிடம் வந்து சேரும். அப்படி வந்த பணமும் தங்கும். இந்த பணத்தை ஈர்ப்பதற்கான ஒரு அற்புதமான மந்திரத்தை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த மந்திரத்தை நாம் மூன்று தினங்களில் எழுதத் தொடங்கலாம். ஒன்று அமாவாசை, அடுத்தது பௌர்ணமி, மூன்றாவது வளர்பிறை வெள்ளிக்கிழமை இதில் ஏதாவது ஒரு நாளை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த மந்திரத்தை எழுத புதிதாக கோடு போடாத வெள்ளை நிறத்திலான நோட்டு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் எழுதும் பேனா மையின் நிறம் நீலம் நல்லது பச்சையாக இருக்க வேண்டும். பேனாவின் நிறம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதில் எழுதும் எழுத்தின் நிறம் இந்த இரண்டில் ஒன்றாக தான் இருக்க வேண்டும். அதே போல் இந்த மந்திரத்தை காலை 4 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக எழுதலாம். மாலை வேளையில் எழுதுவதாக இருந்தால் 5:00 மணியில் இருந்து 9 மணிக்குள்ளாக எழுதி விடுங்கள்.

இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு எழுத ஆரம்பியுங்கள். மந்திரம் எழுதி முடிக்கும் வரை அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு இந்த மந்திரத்தை எழுதலாம் தவறில்லை. அதே போல் இந்த மந்திரம் எழுதிய நோட்டை தூக்கி தூரப் போடாமல் பூஜையறையில் எடுத்து வைத்து விடுங்கள். இப்போது அந்த மந்திரம் என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

ஸ்ரீம்

இந்த பீஜ மந்திரத்தை தான் நீங்கள் தினமும் 108 முறை எழுத வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்ரீம் என்ற வார்த்தையை எழுதும் போதும் மனதிற்குள் ஆழமாக பதிய வைத்து மனதார சொல்லுங்கள். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் வரை எழுத வேண்டும். முடிந்த வரையில் இடையில் நிறுத்தாமல் எழுதுவது சிறந்தது. பெண்களுக்கு அவர்களுடைய மாதவிலக்கு நாள் இதில் கணக்கில் வராது.

இந்த ஒரு வார்த்தையை நாம் சொல்லுவதால் பணம் நமக்கு வந்து விடுமா? என்று கேட்டால் வார்த்தையை மட்டும் சொன்னால் பணம் வராது. இந்த வார்த்தையை சொல்லிக் கொண்டே நம்முடைய முயற்சிகள் செய்யும் போது கண்டிப்பாக அந்த முயற்சிகள் வெற்றி அடையும். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி உண்டு இது மகாலட்சுமி தாயாரின் அருள் பெற்ற மந்திர வார்த்தை இந்த வார்த்தையை நீங்கள் உச்சரிக்க உச்சரிக்க பணமானது உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீடு தேடி வர பரிகாரம்

இதை எழுதும் போது மனதார நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். இது மிகவும் முக்கியம். இந்த மந்திர வார்த்தை பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பின், நம்பிக்கையுடன் செய்து தாராளமான பண வரவை பெறலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -