நீங்கள் வேண்டும் பணம் உங்களை வந்து அடைய இன்றே இந்த விரலி மஞ்சள் பரிகாரத்தை செய்து விடுங்கள். பணம் வரும் திசை தெரியாமல் உங்களை வந்து சேந்தே தீரும்.

mahalshmi cash manjal
- Advertisement -

பண தேவை என்பது இல்லாத மனிதரே கிடையாது. ஒவ்வொருவரின் தேவையும் அளவு மாறுபடுமே அன்றி பணம் தேவையில்லை என்று கூறும் ஒருவர் இருக்கவே முடியாது. அதே போல் ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கும் இந்த பணம் நம்மிடம் இருந்தால் நம்முடைய பிரச்சனைகளை சரி செய்து விடலாம் என்று தோன்றும். அப்படி நமக்கு தேவைப்படும் பணம் தேவையான நேரத்தில் நமக்கு கிடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பண வரவை அதிகரிக்க விரலி மஞ்சள் பரிகாரம்:
இந்த பரிகாரத்தை வியாழக் கிழமையில் தான் செய்ய வேண்டும். ஏனெனில் வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரிய நாள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்பேற்பட்ட இந்த நாளில் பணத்தை வேண்டி நாம் செய்யும் இந்த பரிகாரம் பல மடங்கு பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

வியாழக்கிழமை மாலை 5 லிருந்து 7 மணிக்குள்ளாக இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்கு கொஞ்சம் விரலி மஞ்சள் வாங்கி நாம் வீட்டிலே அரைத்து எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இதற்கு நல்ல தூய்மையான மஞ்சள் தான் பயன்படுத்த வேண்டும். எனவே நீங்கள் விரலி மஞ்சள் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளை ஒரு தட்டில் பரப்பி விட்டு பூஜை அறையில் வைத்து விளக்கை ஏற்றி விடுங்கள்.

அதன் பிறகு மஞ்சள் பரப்பிய தட்டில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதாவது உங்கள் பிரச்சனைகளை முடிக்க எந்த அளவிற்கு உங்களுக்கு பணத் தேவை இருக்கிறதோ அதை எழுத வேண்டும். இதை எழுதும் போது உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வம் அல்லது திருப்பதி வெங்கடாசலபதி இவர்கள் மனதில் நினைத்துக் கொண்டு எழுதுங்கள்.

- Advertisement -

இதை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். எழுதும் பொழுதே நீங்கள் எழுதும் தொகையானது உங்களுக்கு கிடைத்து விட்டதாகவும் சொல்ல வேண்டும். அதாவது இந்தத் தொகை எனக்கு தேவைப்படுகிறது அது எனக்கு கிடைத்து விட்டது என்பது போல நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள்ளாகவே நீங்கள் வேண்டும் பணமானது உங்களை வந்து அடைவதற்கான வாய்ப்பும் வழியும் உங்களுக்கு புலப்படும் என்று சொல்லப்படுகிறது.

அதன் பிறகு இந்த மஞ்சளை நாம் வீட்டில் உள்ள அனைவரும் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வரும் பொழுது நிச்சயம் நம்முடைய பணத் தேவை முழுவதும் பூர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. நம்முடைய தேவைகளை இறைவனிடத்தில் செலுத்தி அது நமக்கு நிறைவேறி விட்டதாக நாம் ஆழ்மனது நம்பும் போது நிச்சயம் அது நடந்தே தீரும் என்பது தான் நியதி.

இதையும் படிக்கலாமே: வீட்டில் வாட்டி வதைக்கும் பிரச்சனைகள் பறந்தோட சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன தெரியுமா? இந்த மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு தோல்வியே கிடையாது!
இந்தப் பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பண தேவைகளையும் பூர்த்தி செய்து நல்லதொரு வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -