பண தேவை பூர்த்தி செய்ய மந்திரம்

vishnu cash
- Advertisement -

இன்றைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான தேவையாக கருதப்படுவது பணம் தான். பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு மனிதரை கூட நம்மால் காண முடியாது. எவ்வளவு பணம் வந்தாலும் போராடா கூடிய ஒரு காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியான இந்த சூழ்நிலையில் பணம் நமக்கு வந்து கொண்டே இருக்க ஒரு எளிமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணத் தேவையை பூர்த்தி செய்யும் மந்திரம்

பண தேவை பூர்த்தி செய்யும் மந்திரம் என்று சொன்னவுடன் யாரெல்லாம் படிக்க வேண்டும் என்ற சந்தேகமே வேண்டாம். அனைவருக்குமே பணத் தேவை உண்டு. ஆகையால் அனைவருமே இதை படிக்கலாம். இதை துவங்க ஏதேனும் ஒரு நல்ல நாளாக உங்களுக்கு ஏற்றதாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த நாமத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் சொல்ல வேண்டும். எவ்வளவு சீக்கிரம் சொல்கிறோமோ அவ்வளவு பலன்களை பெற முடியும். ஆகையால் காலை 5:30 மணிக்குள்ளாக எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு இந்த நாமத்தை படிக்க வேண்டும்.

இந்த நாமத்தை படிப்பதற்கு முன்பாக தீபத்திற்கு முன்பாக ஒரு மனைப்பலகையை போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு துணியை விரித்து அதற்கு மேல் தான் நீங்கள் அமர வேண்டும். அப்போது கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கீழ் வரும் இந்த நாமத்தை சொல்லுங்கள்

- Advertisement -

ஸ்ரீ ஹிரண்ய கர்ப்பாய நமஹ

என்ற இந்த நாமத்தை 1008 முறை சொல்ல வேண்டும். இது தான் நமக்கு சொல்லி இருக்கின்ற முறை. ஆனால் 1008 முறை சொல்வது பலராலும் முடியாது. ஆகையால் குறைந்தது108 முறையாவது சொல்ல வேண்டும். இதற்கு குறைவாக இந்த நாமத்தை சொல்லக் கூடாது. இந்த நாமத்தை சொல்லும் போது உங்களால் முடிந்த எளிமையான ஒரு தெய்வேத்தியம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு முடிந்த பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்தின் உண்டியலில் போட்டு விடலாம். அது எந்த தெய்வத்தின் ஆலயமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதே முறையில் 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பெண்கள் மாதவிலக்கான நான்கு நாட்கள் தவிர்த்து விட்டு ஐந்தாவது நாளில் இருந்து தொடங்கலாம்.

இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு நிலம் அமைய வழிபாடு

இது பணம் வருவதற்கான மந்திரம் தானே இதை தினமும் சொல்லலாமா என்றால் சொல்லக் கூடாது. 48 நாட்கள் இத்தனை முறை சொல்ல வேண்டும் என்பது தான் இதற்கான விதி. இந்த முறையில் சொன்னாலே போதும் காலத்திற்கும் நமக்கு பண பிரச்சனை வராமல் இருக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாட்டை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -