இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தால் பர்சில் வைக்க முடியாத அளவிற்கு பணம் உங்களைத் தேடி வரும்.

purse
- Advertisement -

பணம்தான் பிரதானம் என்பதற்கு நாம் பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். பொதுவாக ஒருவர் ஒரு செயலை செய்ய நினைக்கிறார் அல்லது ஆரம்பிக்கிறார் என்றால், அதை செய்வதால் எந்த அளவுக்கு தனக்கு லாபம் கிடைக்கும், ஆதாயம் கிடைக்கும், பணவரவு ஏற்படும் என்று யோசித்து தான் செய்கிறார்கள். கடவுளை வணங்கும் பொழுது கூட எந்த கடவுளை வணங்கினால் பணவரவு அதிகரிக்கும் என்று தெரிந்து கொண்டு அந்த கடவுளை சென்று வழிபடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். இவ்வாறு நாம் செய்வதால் நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை ஆகாது. அந்த நம்பிக்கையோடு சேர்ந்து நாம் முயற்சிக்கவும் வேண்டும். முயற்சியே திருவினையாக்கும். நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடைந்து அதன் மூலம் நமக்கு பணவரவு ஏற்படுவதற்குரிய எளிமையான மந்திர வழிபாட்டு முறையை தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் நம்மிடம் அதிகமாக சேர வேண்டும் என்றால் நமக்கு குபேரர் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். மேலும் நவகிரகங்களில் சுக்கிரனின் ஆதிக்கமும், நற்பலன்களும் நமக்கு கிடைத்தால் நம்மால் பணத்தை அதிகளவு ஈட்ட முடியும். நம்மிடம் பணம் அதிக அளவு சேரும் வாய்ப்புகள் ஏற்படும்.

- Advertisement -

பொதுவாக நாம் அனைவரும் பணத்தை நம்முடைய பர்சில் வைப்போம். அவ்வாறு வைக்கக்கூடிய பர்ஸ் முடிந்த அளவிற்கு மஞ்சள் நிறத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் புதிதாக பர்ஸ் வாங்கும் போது சுக்கிர ஹோரையில் வாங்கினால் சுக்கிர பகவானின் அருளோடு அந்த பர்சில் பண வரவு என்பது இருந்து கொண்டே இருக்கும்.

அதேபோல் ஆண்கள் தங்களுடைய பர்ஸ்ஸை பேண்ட் பாக்கெட்டில் பின்புறமாக வைப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவுக்கு சட்டை பாக்கெட்டில் வைக்க பழகிக் கொள்ள வேண்டும். திருமாலின் மார்பில் வாசம் செய்யக்கூடிய மகாலட்சுமி தாயாரை நாம் பேன்ட் பின்பக்கத்தில் வைத்தால் அது அவமதிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக வீட்டிற்குள் வந்தவுடன் பர்ஸை கண்ட இடங்களில் எடுத்து வைக்காமல் பூஜை அறையில் எடுத்து வைக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். மறுபடியும் வெளியில் செல்லும் பொழுது உங்களுக்கு அதிர்ஷ்டமான நபராக நீங்கள் உங்கள் வீட்டில் யாரை கருதுகிறீர்களோ அவர்கள் கையால் அந்த பர்ஸை எடுத்துக் கொண்டு வந்து தர சொல்ல வேண்டும். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் அவர்கள் பெண்களாக இருந்தால் அது மிகவும் சிறப்பு. ஏனென்றால் வீட்டில் இருக்கும் திருமணமான சுமங்கலி பெண்கள் மகாலட்சுமிக்கு சமமாக கருதப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் கன்னி தெய்வத்திற்கு சமமாக கருதப்படுகிறார்கள்.

இந்த குறிப்புகளோடு பணம் சேர்வதற்குரிய மந்திரத்தையும் நாம் தினமும் காலையில் பூஜை அறையில் 11 முறை உச்சரித்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் பணவரவு என்பதற்கு எந்தவித குறைவும் இருக்காது அந்த மந்திரம்
“ஓம் ஸ்வர்ண ரட்சகாய நமஹ”

இதையும் படிக்கலாமே: உங்களை ஏளனமாய் பார்த்தவர்கள் உதாசீனப்படுத்தியவர்கள் முன் தலை நிமிர்ந்து வாழ இன்று இரவுக்குள் இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிய பிறகு இதை செய்தால் போதும்.

மேலே கூறிய குறிப்புகளோடு இந்த மந்திரத்தையும் நாம் தினமும் உச்சரித்தோம் என்றால் பணவரவு அதிகரிப்பதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிகள் வெற்றி அடைந்து அதன் மூலமாக நமக்கு அளவில்லா பணவரவு ஏற்படும்.

- Advertisement -