தன வசியம் ஏற்பட்டு பணம் கையில் எப்பொழுதும் இருக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

cash manthiram
- Advertisement -

இன்றைய கால சூழலில் ஒரு ரூபாய் சம்பாதிப்பது கூட அத்தனை போராட்டமாக உள்ளது. இந்த பணத்தை சம்பாதிக்க இரவும் பகலும் பாடுபட்டு உழைக்க வேண்டி இருக்கிறது. அப்படி உடைத்தாலும் எல்லோராலும் பொருளாதார நிலையில் முன்னுக்கு வர முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தன வசியமானது இல்லாமல் போனாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வீட்டில் பணம், பொன், பொருள் எது நம்மிடம் தங்க வேண்டும் எனவும், அதற்கான ஈர்ப்பு தன்மையும் அதை வசியப்படுத்தக் கூடிய அமைப்பும் நமக்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது இல்லாத பட்சத்தில் நாம் எத்தனை சம்பாதித்தாலும் அது வீண் விரயமாகும். அதை கொண்டு நம்மால் முன்னுக்கு வர முடியாத சூழல் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த பண ஈர்ப்பு இல்லாத தன்மை நம்மிடம் இல்லாது போனால் பணத்திற்கு அதிபதியான தெய்வங்களின் கடாட்சமும் குறைந்து இருக்கும்.

- Advertisement -

அதையெல்லாம் தீர்ப்பதற்காக பல்வேறு வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் போன்றவை இருக்கிறது. இதையெல்லாம் அனைவரும் செய்ய முடியுமா என்பதும் சந்தேகம் தான். இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கான எளிய மந்திர வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தன வசியம் ஏற்பட மந்திர வழிபாடு

இந்த வழிபாட்டை நாம் அஷ்டமி நாளில் துவங்க வேண்டும். அது தேய்பிறை அஷ்டமி அல்லது வளர்பிறை அஷ்டமி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் துவங்கும் நாள் அஷ்டமி திதி இருக்க வேண்டும். அத்துடன் இந்த மந்திர வழிபாட்டை செய்யும் நேரம் மிக மிக முக்கியமானது. அது பிரம்ம முகூர்த்த நேரம் தான் இந்த நேரத்தில் மட்டும் தான் இதை செய்ய வேண்டும்.

- Advertisement -

அஷ்டமி நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜை அறையில் ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபத்தின் ஒளியானது கிழக்கு முகமாக எரிய வேண்டும். நீங்கள் அமரும் திசையானது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். இது போல அமர்ந்த பிறகு கீழ்வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் ஸ்ரீம் தன தான்யாதிபதயே ஸ்வாகா

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி ஒரு மண்டலம் வரை தொடர்ந்து இந்த மந்திர வழிபாட்டை விடாது செய்ய வேண்டும். ஆண்கள் பெண்கள் இருவருமே இந்த வழிபாட்டை செய்யலாம். பெண்கள் இந்த வழிபாடு செய்யும் போது அவர்களுக்கான மாதவிலக்கு காலங்கள் தவிர்த்து மீண்டும் மறுபடியும் தொடர்ந்து செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: தெரியாத குல தெய்வத்தை தெரிந்து கொள்ள ஆன்மீகம் சொல்லும் ஒரு வழி

இந்த மந்திரத்தை சொல்ல, சொல்ல உங்களுக்கு தன வசியம் அதிகரிப்பதுடன் தெய்வங்களின் அனுகிரகங்கள் பரிபூரணமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக உங்களுக்கு தன வசியம் ஏற்பட்டு பணவரவிற்கு குறைவில்லாத வகையில் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம். இந்த மந்திர வழிபாட்டு முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பணவரவை பெருக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -