பணம் வந்த சுவடு தெரியாமல் விரையம் ஆகிக்கொண்டே இருக்கிறதா? என்ன செய்தாலும் பணம் தங்கவில்லையா? இந்த ஒரு பொருளை பணத்தோடு சேர்த்து வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

money going out
- Advertisement -

அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல் வீட்டில் பணம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். அதற்காக ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நம்மால் சேர்த்து வைக்க இயலவில்லை என்றால் எவ்வளவு வருத்தப்படுவோம். வருத்தத்தோடு சேர்ந்து கவலையும் ஏற்பட்டு விடும். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் ஒரு பைசா கூட நிற்கவில்லையே என்ற கவலை மேலோங்கும். இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு எந்த பொருளை பணத்தோடு நாம் சேர்த்து வைத்தால் நமக்கு பணம் நிலையாக இருக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பத்து ரூபாய் சம்பாதித்தாலும் அதில் இரண்டு ரூபாய் கையில் இருந்தால் தான் வாழ்க்கையை பிரச்சனைகள் இன்றி நிம்மதியாக நடத்த முடியும். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வரவுக்கு மீறிய செலவு ஏற்பட்டு கையில் பணம் எதுவும் தங்காமல் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலை மாறுவதற்கு நாம் நம்முடைய செலவை குறைக்க வேண்டும் என்றாலும் முக்கியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தானே வேண்டும். அதற்கு ஒரே தீர்வு பணம் நம்மிடம் நிலையாக தங்க வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

இதற்காக பல பரிகாரங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம். இதற்கு நாம் அதிகமாக எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நம் வீட்டு சமையலறையில் இருக்கக்கூடிய ஒரே ஒரு பொருளை பணத்தோடு நாம் சேர்த்து வைத்தோம் என்றால் பணம் நமக்கு பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய பொருட்களாக சில பொருட்கள் நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக கூறப்படும் பொருட்களில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை. இந்த இலவங்கப்பட்டைக்கு ஆகர்ஷணம் செய்யக் கூடிய சக்தி இருக்கிறது. ஆகர்ஷணம் என்றால் இந்த பொருளை நாம் எதனுடன் சேர்த்து வைக்கிறோமோ அதை ஈர்த்துக் கொண்டே இருக்கும். அதாவது அதிகமாக சேரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். உங்களால் இயன்ற அளவு 10, 20, 50, 100, 200, 500 என்று ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் இந்த லவங்கப்பட்டையை வைத்து நன்றாக சுற்றி ஒரு மஞ்சள் நிற நூலால் கட்டிக் கொள்ளுங்கள். கட்டிய இந்த லவங்கப்பட்டையை கல்லாப்பெட்டியிலோ அல்லது வீட்டில் பணம் வைத்திருக்கும் பணப்பெட்டியிலோ வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இலவங்கப்பட்டையின் சக்தியானது பணத்தை அதிகமாக ஈர்த்து நம்மிடம் நிலையாக தங்க வைக்கும்.

இதையும் படிக்கலாமே: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எளிமையான இந்த பூஜை முறையை இனி மேலாவது நம் வீட்டில் செய்து பணத்தடைகளை உடைத்து எறிந்து சகல செல்வங்களையும் பெறலாம்.

அனைவரின் இல்ல சமையல் அறையில் இருக்கக்கூடிய ஒரு சாதாரண லவங்கப்பட்டையை நாம் பணத்துடன் சேர்த்து வைத்து பணத்தை நம் வசப்படுத்தி நம்முடனே நிலையாக வைத்திருப்போம்.

- Advertisement -