பணத்தை எப்போதும் இப்படி வைத்தால் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்ல க்கூடிய சூழ்நிலை வரவே வராது. பணம் எப்போதும் கையில் புழங்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய தாந்த்ரீக வழி.

mahalakshmi cash
- Advertisement -

பணம் எப்போதும் கையில் தாராளமாக இருக்க வேண்டும் என்றால் கோடி கோடியாக கொட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய தேவைக்கு பணம் இல்லை என்ற சூழ்நிலை வராமல் இருந்தாலே போதும். நம்முடைய தேவைக்கு பிறரிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாமல் தேவைக்கு சம்பாதித்து சேர்க்கும் நிலை இருந்தாலே இன்றைய காலக்கட்டத்தில் பெரிய விஷயமாக இருக்கிறது.

ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நம்முடைய தேவைக்கு எப்பொழுதும் பிறரை நாடாமல் இருக்க ஒரு எளிய பரிகார முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இது நம் முன்னோர்கள் அந்த காலங்களிலே பயன்படுத்தி வந்த ஒரு முறை தான். நம் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்க அதில் ஒரு சில பொருட்களை சேர்த்து வைத்து இதையே பரிகாரமாக செய்யப் போகிறோம்.

- Advertisement -

பணம் எப்போதும் கையில் இருக்க
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் நான்கு கோமதி சக்கரம், இரண்டு சோழி ஒரு ஒரு சிகப்பு சுருக்குப்பை இவை தான் இந்த பரிகாரத்திற்கு முக்கியமான ஒன்று. அதே போல பணம் தொடர்பான அனைத்து காரியங்களும் நமக்கு சாதகமாக முடிய மகாலட்சுமி தாயாரின் அழகு கிரகத்தை பெற வேண்டியது மிகவும் அவசியம் எனவே இந்த பரிகாரத்தையும் வெள்ளிக்கிழமையில் தொடங்குவது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.

வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். தாயாருக்கு வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து தீப தூப ஆராதனை செய்து விடுங்கள். அதே போல் தாயாருக்கு ஏதாவது எளிமையான நெய்வேத்தியம் படைப்பது மிகவும் சிறப்பு. இதை அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் செய்யும் போது குடும்பம் நல்ல சுபிட்சத்துடன் இருக்கும்.

- Advertisement -

இதையெல்லாம் செய்த பிறகு சுருக்குப் பையில் சோழி, கோமதி சக்கரம் இரண்டையும் போட்டு பிறகு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசியில் சிறிதளவு அந்த பையில் போட்டு விடுங்கள். அதன் பிறகு அதில் உங்களிடம் இருக்கும் பணம் அது 100 ரூபாயாக இருக்கலாம் அல்லது 500 ரூபாயாக இருக்கலாம். எவ்வளவு இருந்தாலும் கொஞ்சம் அதில் போட்டு தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து இந்தப் பையில் பணம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்தப் பையை உங்கள் பீரோவில் கொண்டு வைத்து விடுங்கள். நீங்கள் எப்போது பணம் வைத்தாலும் எடுத்தாலும் இந்த பையில் வைத்து எடுப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தொடர்ந்து செய்யும் பொழுது இதில் வைத்து நீங்கள் எடுக்கும் பணம் பல மடங்கு பெருகி வீண் விரையம் ஆகாமல் அது சேமிப்பாக மாறக் கூடிய வாய்ப்பினை தரும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கை எப்போதும் ரத்தினக் கல் போல பளபளப்பாக ஜொலித்துக் கொண்டே இருக்க ரகசிய பரிகாரம். இந்த விஷயம் தெரிந்தால் குப்பையில் தூக்கிப் போடும் இந்த பொருளைக் கொண்டு வந்து லாக்கரில் வெச்சுபீங்க.

இது மிக மிக எளிய பரிகாரம் தான். அதிலும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் தான் இந்த சுருக்குப்பையில் பணம் வைத்து எடுப்பது இத்துடன் நாம் தாயாரின் அனுகிரகம் பெற்ற பொருள்களை சேர்த்து வைக்கும் பொழுது பண ஈர்ப்பு அதிகரித்து பணம் பற்றாமல் இருக்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம் என்று தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -