வீட்டில் பணம் நிலைக்க வில்லையா? நினைத்த அளவிற்கு செல்வம் பெருக வில்லையா? இந்த எளிய சூட்சம பரிகாரத்தை பின்பற்றுங்கள்

cash
- Advertisement -

சில வீடுகளில் பண வரவு அதிகமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் அந்த பணம் செலவாகி விடுகிறது, கையில் பணம் தங்குவதே இல்லை, என்று சாதா பண பிரச்சினை பற்றி புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இதனால் எப்போதும் எதிர் காலத்தைப் பற்றிய கவலை இவர்களை கலங்கடித்து கொண்டே இருக்கும். இதனாலேயே இவர்களின் மகிழ்ச்சி என்பது மறைந்து எப்போதும் கவலை நிறைந்த முகத்துடன் இருப்பார்கள். இவ்வாறான கவலைகள் மறைந்து வீட்டில் பணம் நிலைக்கவும், செல்வம் பெருகவும் இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் போதும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

kavalai

பொதுவாகவே ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டு, அதன் பின் வீட்டில் விளக்கு ஏற்றி லட்சுமி தேவியை பூஜை செய்துவர வேண்டும். இவ்வாறு மாதம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் நிதிப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து சுமூகமான சூழல் வந்தடையும்.

- Advertisement -

ஒரு கண்ணாடி டப்பாவை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பச்சரிசியை சேர்க்க வேண்டும். அதன்மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு மீண்டும் சிறிதளவு பச்சை அரிசியை சேர்த்து அதன் மீது ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.

செல்வம் பெருக பரிகாரம்:ration-rice

அதன் பின் ஐந்து ரூபாய் நாணயத்தின் மீது சிறிதளவு பச்சரிசியை சேர்த்து அதற்கு மேல் பத்து ரூபாய் நாணயம் வைத்து இறுதியாக சிறிதளவு பச்சரிசியை கண்ணாடி டப்பா நிறையும் வரை சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த டப்பாவை மூடி போட்டு மூட வேண்டும். அதன்பின் இந்த டப்பாவின் மூடியின் மீது ஆறு துளைகள் இடவேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த டப்பாவை பூஜை அறையில் வைத்து விடவேண்டும். வேலை செய்யும் இடமாக இருந்தால் நமது கண் பார்வை படும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் பிரபஞ்சத்தின் நேர்மறை எண்ணங்களை ஈர்க்கும் ஆகர்ஷண சக்தி இயற்கையாகவே இந்த அரிசிக்கு இருக்கிறது. எனவே இதனுடன் பணத்தை சேர்த்து வைக்கும் பொழுது அதன் சக்தி செல்வத்தை எப்பொழுதும் நம்மை நோக்கி ஈர்த்து நிலைக்கச் செய்யும்.

coins

மாதம் ஒருமுறை இந்த அரிசியை மாற்றி விட்டு மறுபடியும் இவ்வாறு செய்து வைக்க வேண்டும். இதில் உள்ள அரிசியை காகம், குருவி போன்ற உயிரினங்களுக்கு உணவாக அளித்து விட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் பணவரவையும், செல்வம் பெருகுவதையும் உங்களால் உணர முடியும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வாழ்வில் வளம் பெற வாழ்த்தி இப்பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.

- Advertisement -