செவ்வாய்க்கிழமை இதை மட்டும் செய்தால், 6 ரூபாய், 6 லட்சம் ரூபாயாக சீக்கிரம் மாறி விடும். சீக்கிரம் பணக்காரராக சூட்சம பரிகாரம்.

cash-murugan
- Advertisement -

எப்படியாவது அடித்துப் பிடித்து சீக்கிரம் பணக்காரர் ஆகி விட வேண்டும் என்ற ஆசை மனிதராகப் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. கையில் பொருள் இல்லை என்றால் நிச்சயமாக இந்த உலகத்தில் நமக்கு இடமும் இருக்காது. நமக்கான அங்கீகாரமும் கிடைக்காது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியுமா என்று சில பேர் கேள்வி எழுப்பலாம். இருப்பினும் பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. இது எதார்த்தமான உண்மை.

நம்மில் எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும். பணத்தை சேர்ப்பது என்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. பணத்தை நாம் எந்த அளவுக்கு வெறுக்காமல், விரும்புகின்றோமோ அந்த அளவுக்கு பணம் நம் கைகளில் வந்து சேர்ந்து விடும். நாம் பணத்தை விரும்புவோம். பணம் நம்மை விரும்புவதற்கு என்ன செய்ய வேண்டும். இதோ ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம்.

- Advertisement -

பண பிரச்சனை தீர செவ்வாய்க்கிழமை பரிகாரம்:
பண பிரச்சனை தீர செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம். செவ்வாய்க்கிழமை மதியம் 12:00 மணியிலிருந்து 1:30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதில் 1 ரூபாய் நாணயம், 6 என்ற கணக்கில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இதை பணப்பெட்டியில் வையுங்கள் அவ்வளவுதான்.

அடுத்த வாரம் அந்த பணப்பெட்டியில் அறுபது ரூபாய் சேரும். அடுத்த வாரம் 600, அடுத்த வாரம் 6000, அடுத்த வாரம் 60,000 என்ற கணக்கில் உங்களுக்கு பணம் ஆறு மடங்கு பெருகிக்கொண்டே செல்லும். செவ்வாய்க்கிழமை மதியம் 12:00 மணியிலிருந்து 1:30 மணி வரை பணம் சார்ந்த நல்ல விஷயங்களை நாம் செய்யலாம்.

- Advertisement -

வங்கி கணக்கில் பணம் போடலாம். நல்ல காரியத்திற்காக சீட்டு போட்டு வைத்திருப்போம். அந்த சீட்டு பணத்தை கட்டலாம். அடுத்தவர்களுக்கு கடன் தொகையையும் திருப்பிக் கொடுக்கலாம். இப்படி செய்தால் உங்களுக்கு பணம் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். இந்த நேரத்தில் நீங்கள் சேமிக்கும் சேமிப்பு சுப காரியத்திற்காக செலவு ஆகும்.

இதையும் படிக்கலாமே: உங்களிடம் இருக்கும் இந்த ஒரு பொருளை தர மறுத்தால் வீட்டில் செல்வம் குறைந்து கஷ்டம் வருவதோடு, ஏழு ஜென்ம பாவம் உங்களை தொடர்ந்து வருமாம் தெரியும்மா?.

ஒரே ஒரு வாரம் மஞ்சள் துணியில் நாணயத்தை முடிந்து வைத்தால் போதும். அதற்கு அடுத்த அடுத்த வாரம் மேலே சொன்ன மதிய நேரத்தில், குறிப்பிட்ட தொகையை சேமித்து வாருங்கள். அந்த தொகை 6 என்ற எண் கணக்கில் இருக்க வேண்டும். 60 ரூபாய் பணப்பெட்டியில் சேமிப்பாக வைக்கலாம். 600 ரூபாய் சேமிக்கலாம். 666 ரூபாயை சேமிப்புக்கு ஒதுக்கி வைக்கலாம். 6000 கூட, அது அவரவர் வசதிக்கேற்ப. இப்படி இந்த 6 என்ற எண் உங்களுக்கு அருமையான வாழ்க்கையை கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -