சில்லரை காசுகளை இந்த இடத்தில் வச்சு, செலவு செய்துதான் பாருங்களேன். செலவுக்கு கையில் காசு இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.

coins
- Advertisement -

பொதுவாகவே சம்பளம் வாங்கிய பிறகு, மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள், நம் கையில் வீட்டு செலவுக்காகவும், மற்ற இதர செலவுக்காகவும் நிறைய பணம் இருக்கும். அதுவே சம்பளம் வாங்கி 20, 25 தேதி ஆகிவிட்டது. மாத கடைசி வந்து விட்டது என்றால், பொதுவாகவே ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும், அடுத்த மாத சம்பளம் வரும் வரை பண பற்றாக்குறை ஏற்படும். இது இயல்புதான். இது இயல்பான விஷயமாக இருந்தாலும் மாத இறுதியின் செலவுக்காக நீங்கள் ஒரு தொகையை ஒதுக்கி வைத்து விட வேண்டும்.

மாத இறுதியில் கடன் வாங்குவது, பிறகு சம்பளம் வந்தால் அந்த கடனை திருப்பிக் கொடுப்பது, பின்பு அடுத்த மாதம் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு, அடுத்த மாத இறுதியில் கடன் வாங்குவது, என்று இது தொடர்கதையாக செல்லும். ஆகவே மாத தொடக்கத்திலேயே செலவுகளை குறைத்துக் கொண்டு, மாத இறுதிக்காக ஒரு தொகையை ஒதுக்கி வையுங்கள். இதை பின்பற்றியவர்கள் நிச்சயம் கடனாளியாக மாற மாட்டார்கள். கொஞ்சம் கஷ்டம் தான். செலவுகளை குறைத்துத்தான் ஆக வேண்டும். வருமானத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட்டை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பணப்புழக்கம் அதிகரிக்க சில்லறை காசுகளை எந்த இடத்தில் வைப்பது?
சரி, இப்போது மாதம் முழுவதும் நம்முடைய கையில் பணப்பழக்கம் இருக்க வேண்டும் என்றால் சில்லறை காசுகளை வீட்டில் எந்தெந்த இடத்தில் எல்லாம் வைத்து புழுங்கலாம். முதலில் சமையலறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி சில்லறை காசுகளை போட்டு வையுங்கள். சமையலறையில் அலமாரி, சமையல் மேடை, எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் இந்த கிண்ணியை வைக்கலாம்.

பிறகு வரவேற்பு அறையில் நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும் அல்லவா. அந்த கண்ணாடிக்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தில் சிலரை காசுகளை போட்டு வையுங்கள். உங்க வீட்டில் ட்ரெஸ்ஸிங் டேபிள் இருந்தால் அந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் சிலரை காசுகளை வைக்கவும். அந்த சிலரை காசு கண்ணாடியில் பிரதிபலித்தால் இன்னும் நல்லது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் எதுவோ, அந்த இடத்தில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து அதில் சில்லறை காசுகளை போட்டு செலவு செய்யுங்கள். தினமும் 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு ஏதாவது செலவு நிச்சயம் வீட்டில் இருக்கும். உதாரணத்திற்கு பூ, பால், காய்கறி போன்ற பொருட்களை வாங்குவோம் அல்லவா. அதற்கான சிலரை காசுகளை இந்த கிண்ணியிலிருந்து எடுத்து செலவு செய்து பாருங்களேன். நீங்கள் செலவு செய்ய செய்ய அந்தக் கிண்ணத்தில் சில்லறை காசுகளும் நோட்டுகளும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் தோஷங்கள் என எதையும் வீட்டிற்குள் வராமல் தடுத்து, சகல ஐஸ்வர்யங்களும் நம்மை தேடி வர நிலை வாசலில் இது மட்டும் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த கிண்ணி முழுமையாக காலியாகி அதில் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அதற்காக வேண்டும் என்றே நீங்கள் கிண்ணியில் இருக்கும் பணத்தை எல்லாம், செலவு செய்து விட்டு அதில் பணம் போடாமல் இருந்தால் யாரும் பொறுப்பல்ல. கையில் கிடைக்கும் சிலரை காசுகளை மிச்சம் மீதி வரும் பணத்தை எல்லாம் அந்த கிண்ணத்தில் போட்டு வர, நிச்சயமாக உங்களுடைய வீட்டில் பணப்புழக்கம் இரண்டு மடங்காக அதிகரித்துக் கொண்டே இருக்கும். இது ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -