தீர்க்கவே முடியாத கடன் பிரச்சினையும் நீங்கி, பண வரவை அதிகரிக்க இப்படி எழுதினால் வைத்து கொண்டால் போதும் தெரியும்மா? பணவரவு அதிகரித்து, கடன் தொல்லையில் இருந்து மீள எளிய பரிகாரம்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் போதுமானதாக இருப்பதில்லை. ஒவ்வொருவரின் பணத் தேவைகளும் பெருகிக் கொண்டே தான் செல்கிறதே தவிர, இருப்பதை வைத்து வாழ்ந்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் கூட, அதை செயல்படுத்த முடிவதில்லை. அந்த அளவிற்கு இன்றைய காலக்கட்டம் பண தேவை மிகுந்ததாக மாறி விட்டது. இந்த பணத் தேவையை சமாளிக்க உழைப்புடன் சேர்த்து கொஞ்சம் அதிர்ஷ்டமும், தெய்வ அனுகிரகமும் சேர்த்து கிடைத்தால் இன்னும் நல்ல முறையில் நாம் வாழலாம். அதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணம் நம்மிடம் தங்குவதற்கு நாம் பணத்தை ஓடி ஓடி சம்பாதித்தால் மட்டும் போதாது. அந்த பணம் நம்மிடம் தங்க வேண்டும். பணம் நம்மை தேடி வந்து நம்மிடத்தில் அது விருப்பப்பட்டு தங்கிக் கொள்ள ஒரு சில ஆன்மீக பரிகாரங்கள் உண்டு அதில் குறிப்பான ஒரு முறை தான் இந்த ஸ்வஸ்திக் முத்திரை பரிகாரம்.

- Advertisement -

இந்த ஸ்வஸ்திக் முத்திரை பற்றி பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த முத்திரை இருக்கும் இடத்தில் பணம் இருக்கும் என்பது சந்தேகமே இல்லை. பெரும்பாலும் கடைகளில் பார்த்திருப்பீர்கள் இந்த ஸ்வஸ்திக் முத்திரையை பதித்து அதில் லாபம் என்று எழுதி இருப்பார்கள். அந்த இடத்திற்கு வருபவர்கள் அந்த முத்திரையை பார்த்து அந்த வார்த்தையை படிக்கும் போது அந்த முத்திரையை பயன்படுத்துபவர்களுக்கு அதன் பலன் சேரும் என்பது தான் இதனுடைய நியதி. அப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த அந்த முத்திரையை வைத்து உங்களின் பண தேவை பூர்த்தி செய்ய எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

அதற்கு முதலில் ஒரு வெள்ளை தாள் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த ஸ்வஸ்திக் முத்திரையை அழகாக வரைந்து கொள்ளுங்கள். அந்த முத்திரை அழகாக வரைய வேண்டும் வரைந்து அதில் உங்களை பணத் தேவை எதுவோ அதை எழுதிக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேறு கடன் பிரச்சனை அல்லது நகை திருப்ப வேண்டும் உங்கள் தேவை எதுவோ அதை ஸ்வஸ்திக் முத்திரை வரைந்த தாளில் எழுதி நீங்கள் தினமும் பயன்படுத்தும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் மணி பரிசில் வைத்துக் கொண்டாலும் சரி.

- Advertisement -

இந்த முத்திரையையும், இந்த எழுத்தையும் தினமும் நீங்கள் ஒரு முறை எடுத்து மனதில் தெய்வத்தை நினைத்து வணங்கி, இதில் எழுதி இருப்பது எனக்கு நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதில் எழுதி உள்ளதை படித்து வாருங்கள். நீங்கள் விரும்பியது உங்களுக்கு கிடைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் இந்த ஸ்வஸ்திக் முத்திரை உங்களுக்கு வகுத்துக் கொடுக்கும்.

இது கேட்க இப்படியெல்லாம் எழுதினால் நடக்குமா என்பதை போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த முத்திரையில் பலன் இருப்பதால் தானே இத்தனை பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரத்தை செய்து வாருங்கள் கட்டாயமாக அந்தப் பிரச்சனைக்கு தீர்வு கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -