பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்

panam sera
- Advertisement -

பணத்தை சம்பாதிக்க வேண்டும். சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக திகழ்கிறது. அந்த குறிக்கோளை நோக்கி பயணம் செய்வதன் மூலம் பலரும் பல விதங்களில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் அதை முறையாக கையாள வேண்டும். இல்லையென்றால் பணம் நம் கைவசம் தங்காது. வீண் விரயங்கள் ஏற்பட்டு வந்த பணமும் வந்த சுவடு தெரியாமல் போய்விடும். இப்படி நேராமல் பணம் நம் கையில் தங்க எந்த தாந்த்ரீக பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எந்த ஒரு பொருளையும் நாம் விரும்பினால் போதாது. விரும்பிய பொருள் நம் கைவசம் வந்ததும் அதற்குரிய தக்க மரியாதையை செலுத்தினால் தான் அந்த பொருள் நம்மிடம் தங்கும் என்று கூறப்படுகிறது. இது உயிருள்ள உயிரற்ற என்று அனைத்து பொருட்களுக்கும் பொதுவாக சொல்லக்கூடிய ஒன்று. விரும்பி வாங்கிவிட்டு அதை உதாசீனம் படுத்தினால் அது நம்மிடம் இருக்காது.

- Advertisement -

இது பணத்திற்கும் பொருந்தக்கூடியது. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் அதை முறையாக கையாள வேண்டும். இல்லையெனில் அதில் நம் கையை விட்டு விலகி விடும். அந்த வகையில் பணம் நம்மிடம் இருப்பதற்கு நாம் சில தாந்திர பரிகாரங்களை செய்யலாம்.

மாதத்திற்கு ஒரு முறை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் சிறிதளவு ஏலக்காய், சிறிதளவு வால்மிளகு, சிறிதளவு பச்சை கற்பூரம், சிறிதளவு ஜாதிபத்திரி, சிறிதளவு முந்திரி எடுத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இந்த மூட்டையை சுக்கிர ஹோரை வரும் பொழுது பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டையை வீட்டிலும் வைக்கலாம். தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் அந்த இடத்தில் பண ஆகர்ஷணம் ஏற்பட்டு பணவரவு என்பது அதிகரிக்கும். மாதத்திற்கு ஒரு முறை இந்த பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக மாற்றி வைக்க வேண்டும்.

மற்றுமொரு பரிகாரம் ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் தாளாக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பத்து ரூபாய் தாள்களை மஞ்சள் நிற நூலை கொண்டு கட்டி நாம் பணம் வைத்திருக்கும் பீரோவில் வைத்து விட வேண்டும். தினமும் வெளியில் செல்வதற்கு முன்பாக இந்த பத்து ரூபாய் கட்டில் இருந்து ஒரு பத்து ரூபாய் மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு செல்லவேண்டும்.

- Advertisement -

அன்றைய நாளில் நாம் செலவு செய்யும் பணத்தில் இந்த பத்து ரூபாயையும் செலவு செய்து விட வேண்டும். இப்படி தினமும் அந்த கட்டில் இருந்து பத்து ரூபாயை எடுத்து செலவு செய்ய வேண்டும். ஆயிரம் ரூபாயும் காலியாகும் பொழுது மறுபடியும் இதே போல் ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் கட்டை வாங்கி வைத்து தினமும் செலவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பீரோவில் பணம் ஆனது நிலையாக நிலைத்திருக்கும். வீண் விரையங்களும் தவிர்க்கப்படும்.

இதையும் படிக்கலாமே: திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்க ஆஞ்சநேயர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை நம்முடைய வாழ்வில் நாமும் மேற்கொண்டு பணவரவை அதிகரிப்போம்.

- Advertisement -