மார்கழியில் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டிய பொருள்.

pachai-karpooram
- Advertisement -

பணம் என்றாலே, எல்லோரும் அசுர வேகத்தில் அந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். அதாவது சீக்கிரம் பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் நாம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு உழைப்பை போட நாம் கொஞ்சம் கஷ்டப்படுகின்றோம்.

எந்த அளவுக்கு கடின உழைப்பை போடுகின்றோமோ, அந்த அளவுக்கு நமக்கு கட்டு கட்டாக பணம் சேரும். இதுதான் நிதர்சனமான உண்மை. இதையும் தாண்டி உழைக்காமல் சில பேர் காசு சேர்க்கிறார்கள் என்று சொல்லலாம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. அவர்கள் சேர்க்கிறார்கள். ஆனால் அதற்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கும்.

- Advertisement -

அதை நாம் போய் அலசி ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும். சுலபமாக எல்லோராலும் மகாலட்சுமியை அடைந்து விட முடியாது. சரி இப்போது மார்கழி மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மார்கழி மாதத்தில் நாம் பணத்தை வசியம் செய்ய ஒரு எளிமையான தாந்திரீக வழிபாடு இந்த பதிவில் உங்களுக்காக.

பெரும்பாலும் எல்லோருக்கும் இந்த மார்கழி மாதத்தில் கோவிலுக்கு போகக்கூடிய வழக்கம் இருக்கும். நீங்கள் சிவன் கோவிலுக்கு போனாலும் சரி, அல்லது பெருமாள் கோவிலுக்கு போனாலும் சரி, இந்த ஒரு பொருளை முதலில் வீட்டுக்கு கொண்டு வாருங்கள். சிவன் கோவிலுக்கு சென்றால் வில்வ இலை உங்களுக்கு கிடைக்கும். பெருமாள் கோவிலுக்கு சென்றால் துளசி இலை கிடைக்கும்.

- Advertisement -

எது கிடைத்தாலும் லட்சுமி கடாட்சம் தான். ஒரு பச்சை துணி எடுத்துக்கோங்க‌. அதில் பச்சை கற்பூரம் 1 துண்டு, வச்சிருங்க. கோவிலில் இருந்து எடுத்து வந்த வில்வ இலையோ அல்லது துளசி இலையோ அல்லது இரண்டு இலைகளையும் வைத்தாலும் சரிதான். அந்த பச்சை துணியில் பச்சை கற்பூரத்தோடு அந்த இலைகளை வச்சி, இதை சின்ன முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் இதை மாட்டி விடுங்கள்.

மார்கழி மாதம் முழுவதும் இந்த முடிச்சுக்கு ஊதுவத்தை காண்பித்து உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். பெருமாளின் ஆசீர்வாதம் சிவபெருமானின் ஆசிர்வாதம் இவை அனைத்தும் நிறைவாக உங்கள் வீட்டில் இருக்கும். அது மட்டுமில்லாமல் பச்சை கற்பூரத்தில் இருக்கும் நேர்மறை ஆற்றல் பண வசியத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை

மார்கழி மாதம் முடிந்ததும் உள்ளே இருக்கும் இலைகளை கால்படாத இடத்தில் போட்டுடுங்க. பச்சை கற்பூரம் கரைந்து இருக்கும். இந்த மார்கழி மாதம் முழுவதும் இந்த முடிச்சு தென்மேற்கு மூலையில் வைத்து வேண்டுதல் வைத்தால், உங்களுக்கு பணம் சேரும். எளிமையான தாந்திர பரிகாரம் தான். இறைவனை நினைத்து தான் செய்யப் போகிறீர்கள். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றுவார்கள். வீட்டில் நிச்சயம் இந்த வருடம் பணக்கஷ்டம் வராது என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -