பண வரவை தரும் பஞ்சமி வழிபாடு

varahi money purse
- Advertisement -

வாராகி அன்னையின் வழிபாடு என்றாலே அது பஞ்சமி திதியில் தான் சப்த கன்னிகளில் ஐந்தாவது அன்னையாக விளங்கும் வாராகி அன்னையை பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது மிகவும் உகந்தது. இந்த வழிபாடு வளர்பிறை பஞ்சமி தேய்பிறை பஞ்சமி என்று இரண்டு முறைகளில் செய்யலாம் இதை தவிர்த்து அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்வது உகந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய தேய்பிறை பஞ்சமி திதியில் அன்னையை வணங்கும் பொழுது நம்முடைய பணப்பிரச்சனை முதல் அனைத்து பிரச்சனைகளையும் அன்னை தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. இத்தகைய பொன்னான நாளில் நம்முடைய பணப் பிரச்சனை தீர செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணவரவு அதிகரிக்க பஞ்சமி வழிபாடு

நாளைய தினம் பஞ்சமி திதியானது காலை 7.00 மணிக்கு துவங்கி மறுநாள் திங்கட்கிழமை காலை 6:00 மணி வரை உள்ளது. நாளைய தினம் முழுவதுமே பஞ்சமி திதி இருந்தாலும் அன்னையின் வழிப்பாடாவது மாலை நேரத்தில்தான் செய்வது வழக்கம். ஆகையால் இந்த வழிபாட்டையும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள்ளாக செய்து விடுங்கள் முடியாதவர்கள் மட்டும் மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யுங்கள்.

இந்த வழிபாடு செய்வதற்கு முன் அன்னைக்கு பஞ்சமி வழிபாடு எந்த முறையில் செய்வீர்களோ அது போல அனைத்தையும் தயார் செய்து வைத்து விடுங்கள். அன்னையின் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைப்பது நெய்வேத்தியம் தயார் செய்வது போன்றவற்றையெல்லாம் செய்து பிறகு இதை செய்யுங்கள். இந்த பரிகாரம் செய்யும் போது வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள். வாசனை நிறைந்து இருக்கும் போது அன்னை மகிழ்ந்து இருப்பார் என்பது ஐதீகம்.

- Advertisement -

வெள்ளை மஞ்சள் , சிகப்பு இந்த மூன்று நிறத்தில் ஏதேனும் ஒரு நிறத்திலான துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த துணி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதில் இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, பச்சை கற்பூரம், ஒரு துண்டு பட்டை, சிறிதளவு சோம்பு அனைத்தையும் வைத்து முடிச்சாக கட்டி விடுங்கள். இந்த முடிச்சை உங்கள் உள்ளங் கையில் வைத்துக் கொண்டு வாராகி அன்னையின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் க்ரீம் தணவர்தினியே நமஹ

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சு உங்களுடைய மணிபர்ஸ் வைத்து விடுங்கள். ஏனெனில் நாம் சம்பாதிக்கும் பணம் கைக்கு வந்தவுடன் முதலில் வைக்கும் இடமே நம்முடைய மணி பர்ஸ் தான். ஆகையால் அங்கு இதை வையுங்கள். வீட்டில் பணம் வைக்கும் இடம் தொழில் செய்யும் இடத்தில் எல்லாம் வைக்க வேண்டும் என்றால் இதே போல இரண்டு மூன்று முடிச்சுகளை கூட ஒரே நேரத்தில் தயார் செய்து வைத்து வழிபாடு செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர்க்கும் முருகர் வழிபாடு

இந்த முடிச்சு ஒரு மாத காலம் வரை அப்படியே இருக்கட்டும் அதன்பிறகு அடுத்த பஞ்சமி திதியில் இதை மாற்றி விட்டு புதிதாக செய்து வைத்துக் கொள்ளுங்கள் இது பண விரைவில் நல்ல மாற்றத்தை ஏற்படு த்திக் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

- Advertisement -