பணம் சம்பாதிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாய் அமையவும், வீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டவும் இந்த தூபத்தை போட்டால் போதும்.

- Advertisement -

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன என்றாலும் சிலருக்கு எந்த வழியில் சென்றாலும் பணத்தை சம்பாதிக்க முடிவதில்லை. எதைத் தொட்டாலும் நஷ்டம் அதில் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவற்றை சரி செய்வதற்கு இந்த ஒரே ஒரு தூபம் போதும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அந்த தூபத்தை எவ்வாறு தயார் செய்வது எப்போது போடுவது என்று தெரிந்து கொள்ளலாம்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்று கூறுவார்கள். நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சிக்கு உரிய பலனை நாம் பெறுவதற்கு தெய்வத்தின் அருளும் நமக்கு தேவைப்படும். அதுவும் பணம் சம்பாதிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றால் தெய்வத்தின் அருள் கண்டிப்பாக தேவை. ரகசியமான இந்த தூபத்தை நாம் நம் வீட்டில் போடும் பொழுது தெய்வத்தின் அருள் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

வீட்டில் பணம் சேர தூபம்
இந்த தூப தூள் செய்வதற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் கற்பூரம் மற்றும் கிராம்பு. இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஐந்து கற்பூரம் என்றால் ஐந்து கிராம்பு எடுத்து இரண்டையும் தனித்தனியாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.

வாரத்தில் ஒரு நாள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாளை தேர்வு செய்து கொண்டு, அன்றைய தினம் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். காலையில் வீட்டை சுத்தம் செய்து, குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடுகளை முடித்த பிறகு, தூபம் போட கங்கை தயார்படுத்திக் கொண்டு அதில் இந்த தயார் செய்து வைத்த தூளை போட்டு நன்றாக வீடு முழுவதும் காட்ட வேண்டும். இந்த தூபத்தை நாம் நம் வீட்டின் அனைத்து இடங்களிலும் காட்ட வேண்டும்.

- Advertisement -

இதே போல் மாலையிலும் குளித்து விட்டு இந்த தூபத்தை வீடு முழுவதும் காட்ட வேண்டும். முதலில் எந்த நாளில் இந்த தூபத்தை போடுகிறோமோ அதே நாளில் தொடர்ந்து 11 வாரங்கள் போட வேண்டும்.இப்படி செய்வதால் நம் வீட்டில் இருக்கக் கூடிய கெட்ட சக்திகள் அனைத்தும் அகன்று விடும். நல்ல சக்திகள் நம்மை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: கடன் தொல்லையால் தினம் தினம் கஷ்டப்படுகிறவர்கள் துளசி செடிக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த எளிமையான வழிபாடு செய்தாலே போதும். பண புழக்கம் அதிகரித்து கடன் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.

இந்த தூபத்தை போடுவதின் மூலம் பணத்தை சம்பாதிப்பதற்குரிய வழிகள் நம்மை தேடி வரும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. நாம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு வெற்றிகள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எந்த முயற்சியும் பிறரை காயப்படுத்தாத மற்றும் கஷ்டப்படுத்தாத நல்ல முயற்சியாக இருப்பின் கண்டிப்பாக வெற்றி அடையும்.

- Advertisement -