பணத்தைத் தேடி நீங்கள் ஓடாமல் பணம் உங்களைத் தேடி ஓடி வர இந்த ரகசிய ஐந்து தாந்திரீக முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

cash raw rice aloe vera
- Advertisement -

தினம் தினம் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் பணமானது உங்களைத் தேடி வர ஆன்மீகம் நமக்கு சில தாந்திரீக வழிமுறைகளை தந்திருக்கிறது. இந்த வழிமுறைகளை சரிவர பின்பற்றும் போது பண ஈர்ப்பு ஏற்பட்டு பணம் ஆனது உங்களைத் தேடி வரும் யோகம் கிடைக்கும். அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சின்ன கண்ணாடி அல்லது மண்பாண்டம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து சிறிதளவு கொத்தமல்லி தழைகளை மேலே போட்டு வைக்க வேண்டும். இது பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. தினந்தோறும் தண்ணீரையும் கொத்தமல்லியையும் மாற்றி விட வேண்டும்.

- Advertisement -

அடுத்து வீட்டில் சமையலறையில் ஒரு சின்ன கிண்ணத்தில் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த அரிசி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதில் வீட்டில் வருமானத்தை ஈட்டுபவர் யாரோ அவர் முதல் நாணயத்தை அரிசியில் புதைக்க வேண்டும். அடுத்தடுத்து வீட்டில் உள்ள அனைவரும் அரிசியில் நாணயத்தை புதைத்து வைத்து விடுங்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதில் இருக்கும் நாணயத்தை எடுத்து விட்டு அரிசியை பறவைகளுக்கு போட்டு விடுங்கள். மறுபடியும் வேறு அரிசியை மாற்றி இது போல வைத்து விடுங்கள். இது மகாலஷ்மி தாயார் அன்னபூரணி தாயாரின் அனுகிரகம் பெற வழி செய்யும்.

இதே போல் தென்கிழக்கு மூலையில் சோள கதிர்களை ஒரு துணியில் மூட்டையாக கட்டி தொங்க விடுங்கள். இதையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இதை மாற்றும் போது சோளக்கதிர்களை பறவைகளுக்கு தானமாக போட்டு விட்டு விடுங்கள். பொதுவாக கற்றாழை செடியை வீட்டின் முன்புறம் வைப்பது வழக்கம். ஆனால் ஒரே ஒரு கற்றாழை செடியை வீட்டின் பின்புறம் வைத்து வளர்த்து வந்தால் தேவையில்லாத செலவுகள் குறைவதோடு பணமும் கையில் தாராளமாக புழங்கும்.

- Advertisement -

இவை அனைத்தும் விட முக்கியமான இந்த பரிகாரத்தை செய்து விடலாம். இதற்கு நீங்கள் தினமும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போது குங்குமத்தை கொஞ்சம் பேஸ்ட் போல குழைத்து அதில் ஒரு குச்சியை வைத்து இடது கையால் ரூ என்ற வார்த்தையை போட வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் ருபீஸ் என எழுத வேண்டும். இதை பௌர்ணமி நாளில் தொடங்கி அமாவாசை வரை செய்ய வேண்டு.ம் அதாவது 15 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இதை தினமும் செய்யும் பொழுது பணத்தை ஈர்க்க நீங்கள் தயாராகி விடுவீர்கள். இதன் மூலம் பணம் உங்களைத் தேடி வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தாந்திரீக முறைகளை பின்பற்றினால் மட்டும் பணம் நமக்கு வந்து விடுமா? என்ற கேள்வி பலருக்கும் எழும்பலாம். இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுவதன் மூலம் பணத்தை சேமிக்க, சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். அது மட்டும் இன்றி புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும் வராத பணம் நமக்கு வரும்.

இதையும் படிக்காலமே: கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். திங்கட்கிழமை ஒரு கைப்பிடி கல்லுப்பை உங்கள் கையால் இந்த நேரத்தில் தண்ணீரில் கரைத்தால்.

இந்த தாந்த்ரீக பரிகார முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதையெல்லாம் கடைப்பிடித்து பணவரவை அதிகரித்து கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -