பணம் சேர உப்பு பரிகாரம்

lakshmi kaluppu
- Advertisement -

ஒருவர் கடுமையாக உழைப்பதற்கு காரணம் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். என்னதான் கடினமாக உழைத்தாலும் அவரவர்களுடைய கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு தான் பணத்தை சம்பாதிக்க முடியும். இப்படி சம்பாதித்தாலும் அதை சேமிப்பாக உயர்த்துவது என்பது அனைவராலும் செய்ய முடியாது. வீண் விரயங்கள் ஏற்படாமல் நம்முடைய உழைப்புக்கேற்ற பணவரவு ஏற்படவும் வரவு சேமிப்பாக உயரமும் மகாலட்சுமி தாயார் எந்த முறையில் உப்பை வைத்து வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

செல்வங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயார் பல பொருட்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார். அப்படிப்பட்ட பொருட்களில் மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்வது கல் உப்பு. இதற்கு காரணம் மகாலட்சுமி தாயார் உருவான இடமும் கல் உப்பு உருவான இடமும் ஒரே இடம் என்பதால்தான். அதுதான் கடல்.

- Advertisement -

கடலில் இருந்து தோன்றியவள் மகாலட்சுமி என்பதாலும் அதே கடலில் இருந்துதான் கல் உப்பு தோன்றியது என்பதாலும் கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. எந்த வீட்டில் கல் உப்பை உதாசீனப்படுத்தாமல் அதிக அளவில் சேர்த்து வைக்கிறோமோ அந்த வீட்டில் மகாலட்சுமி அருள் பரிபூரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட உப்பை எந்த முறையில் வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்றுதான் பார்ப்போம்.

இந்த வழிபாட்டை மகாலட்சுமிக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்புக்குரியது. இந்த வழிபாட்டிற்கு நமக்கு புதிதாக வாங்கிய ஒரு மண்பானை வேண்டும். அதேபோல் கல் உப்பு வேண்டும். முதல் நாள் இரவே மண் பானையை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து காய வைத்து விட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் இந்த மண்பானையை எடுத்து அதை சுற்றி ஐந்து இடங்களில் திருநீற்றால் பட்டை போட்டு அதற்கு மேல் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மண்பானையை வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விட்டு அதில் நிறைய கோபுரம் போல் கல் உப்பை கொட்டி வைக்க வேண்டும். நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ அத்தனை எண்ணிக்கையில் அந்த கல்லுப்பிற்க்கு மேல் மா இலைகளை சொருகி வைக்க வேண்டும். இந்த மண் பானையை சுற்றி மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக இந்த மண்பானைக்கு சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். அப்படி சாம்பிராணி தூபம் காட்டும் பொழுது அதில் மஞ்சள் தூளை போட்டு காட்ட வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 11 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். 11 நாட்கள் வழிபாடு முடிந்த பிறகு இதிலிருந்து சிறிதளவு மட்டும் எடுத்து அன்னதானத்திற்காக வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் பணவரவு என்பது அதிகரிக்கும் வீண் விரயம் தவிர்க்கப்படும் சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க விநாயகர் வழிபாடு

முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரை நினைத்து கல் உப்பை வைத்து இப்படி வழிபட பணவரவு என்பது தாராளமாக இருக்கும்.

- Advertisement -