பணப் பிரச்சினை தீர மகாலட்சுமி தீபம்

mahalakshmi dheepam
- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கவலை, துன்பம் என்ற அனைத்தும் நிறைந்து இருக்கும். பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தைகள், தொழில் என்று பல விஷயங்களில் பிரச்சனைகள் வாழ்வில் ஏற்படும். இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது பணம். ஒரு மனிதனுக்கு போதுமான அளவிற்கு பணம் இருந்தால் அவரால் நிம்மதியாக வாழ முடியும். தேவைக்கு மீறி பணம் இருந்தால் அதைவிட மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்.

வரவிற்கு மீறிய செலவு என்ற பட்சத்தில் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பிறகு அந்த கடனை அடைக்க வேறொரு கடன் என்று அவர்களின் காலம் கடனிலேயே முடிவடைகிறது. கடன் தொல்லை பெருகி வாழ்வில் நிம்மதியற்ற நிலையில் நாம் நிற்கும் இந்த நிலையைக்கு ஜாதகத்தில் ஆறாவது இடத்திற்கு அதிபதியானவர் தான் காரணம்.

- Advertisement -

ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையை குறைப்பதற்கும், பணரீதியான பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து நம்முடைய தேவைக்கேற்ற பண வரவை தருவதற்கும் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பணப் பிரச்சினை தீர தீபம்

இந்த தீபத்தை மாலை 6:00 ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையிலும் ஏற்றலாம். நிலை வாசலின் உட்புறமும் ஏற்றலாம். பஞ்சு திரி எடுத்துக் கொண்டு அதை மஞ்சளில் நனைத்து நன்றாக தடவி வைத்துக் கொள்ளுங்கள். பின் அகல் விளக்கில் நெய் ஊற்றி மஞ்சள் திரியை போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி “ஓம் அஷ்ட ஐஸ்வர்ய லட்சுமியே நமஹ” என்ற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

இப்படி முழு மனதுடன் வணங்கி வீட்டில் உள்ள அனைத்து கடன் தொல்லைகளும் நீங்க வேண்டும் என்று வீட்டு பெண்கள் முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபத்தை தினமும் ஏற்றலாம். அப்படி ஏற்ற இயலாதவர்கள் செவ்வாய், வெள்ளி கிழமையில் மட்டுமாவது ஏற்றலாம். இன்னும் சிறந்த பலனை பெறுவதற்கு இரண்டு தீபங்கள் ஏற்றுவதற்கு பதிலாக வீட்டு பூஜை அறையில் எட்டு தீபங்கள் ஏற்றி வழிபட அஷ்டலட்சுமிகளின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதே முறைப்படி அகல் விளக்கில் நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு எட்டு தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். நிலை வாசலில் ஏற்றுபவர்களாக இருந்தால் இரண்டு தீபங்கள் மட்டும் ஏற்றினால் போதும். இவ்வாறு செய்வதால் ஆறாம் இடத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் கூட அஷ்டலட்சுமி அந்த தோஷத்தை நிறைவு செய்து விடுவாள். பண ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் போதிய பண வருமானம் உண்டாகும்.

இதனால் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வாழ்வில் கடன் என்னும் பிரச்சனை வராது. அவை அனைத்தையும் நிறைவு செய்துவிடுவாள் மகாலட்சுமி தேவி. இதை முழுமனதுடன் நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு மட்டுமே பலன் சிறந்த முறையில் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க விநாயகர் வழிபாடு
இந்த தீபத்தை முழு மனதுடன் ஏற்றினால் நிச்சயமாக நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் ஏற்றி இந்த தீபத்திற்கான பலனை முழுவதுமாக பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -