3 ஏலக்காய்களை பூஜை அறையில் தினமும் இப்படி வைத்தாலே போதும். வீட்டில்பண கஷ்டம் என்பதே வராது. கடன் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

lakshmi-yelakkai-cardamom
- Advertisement -

எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும் உழைப்புக்குத் தகுந்த வருமானம் கிடைக்கவில்லை. அப்படியே கைக்கு வருமானமாக ஒரு தொகை வந்தாலும், அது நிலையாக வீட்டில் தங்குவதில்லை. வீண் விரைய செலவு, மருத்துவ செலவு, இன்னும் பல தேவை இல்லாத செலவுகள் வந்து, கையில் இருக்கும் பணத்தை அள்ளிக் கொண்டு செல்கிறது. எப்படித்தான் இந்த பணத்தை சேமிப்பது. வீண்விரயத்தை எப்படித் தான் குறைப்பது. வாங்கிய கடனை எல்லாம் எப்படி தான் வட்டியும் முதலுமாக திருப்பி தருவது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு கஷ்டப்படுபவர்கள் எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

நிச்சயமாக உங்கள் பண கஷ்டத்திற்கு சீக்கிரத்தில் ஒரு தீர்வு கிடைக்கும். பொதுவாகவே பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி, வாசம் நிறைந்த பொருட்களுக்கு உண்டு என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் பெருமாளுக்கு உகந்த, மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்த வாசம் நிறைந்த ஏலக்காயை வைத்து தான் இன்று ஒரு ஆன்மீகம் பரிகாரத்தை பார்க்க போகின்றோம்.

- Advertisement -

பணம் கஷ்டம் தீர்க்கும் ஏலக்காய் பரிகாரம்:
இந்த பூஜை செய்ய நமக்கு முக்கியமா தேவைப்படும் பொருள் மூன்று ஏலக்காய்கள். மூன்று ஏலக்காய் வைத்து எளிமையான முறையில் பணக்கஷ்டம் தீர பூஜை செய்வது எப்படி. காலையில் எழுந்து கொள்ள வேண்டும். காலை 6 மணிக்கு முன்பாகவே சுத்த பத்தமாக குளித்துவிட்டு, வீட்டில் இருக்கும் பெண்களுது கையால் இந்த பூஜையை செய்ய வேண்டும். வீட்டில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் 3 ஏலகாய்களை வைத்து, பூஜை அறையில் மகாலட்சுமி தாயின் பாதங்களில் அந்த ஏலக்காய்களை வைத்து விடுங்கள்.

அதன் பிறகு பூஜையறையில் சிறிது நேரம் அமர்ந்து உங்கள் பண கஷ்டத்தை எல்லாம் குலதெய்வத்திடமும், மகாலட்சுமி தாயிடம் மனம் உருகி சொல்லி பிரச்சனைகள் தீர வேண்டும் என்று  பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை என்பது ஐந்து நிமிடமாக இருந்தால் கூட போதும். ஆனால் அந்தப் பிரார்த்தனையில் மனமார்ந்த ஆத்மார்த்தமான நம்பிக்கை இருக்க வேண்டும். போன போக்கில் பூஜை செய்வதில் எந்த பலனும் கிடைக்காது.

- Advertisement -

பண பிரச்சினைகள் தீர இறைவனை மனம் உருகி பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பூஜை அனைத்தும் காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். பூஜை அறையில் வைத்த அந்த மூன்று ஏலக்காய்களை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வாருங்கள். 11 நாட்கள் இந்த பரிகார பூஜை செய்யப்பட வேண்டும். 11 நாளில் இடையில், பூஜையில் தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

11 நாட்கள் தினமும் மூன்று ஏலக்காய்களை பூஜையறையில் வைத்து வேண்டுதல் வைத்தால், மொத்தமாக 33 ஏலக்கார்கள் உங்களிடம் சேர்ந்திருக்கும் அல்லவா. அதை அப்படியே சேகரித்து வைத்து ஒருநாள் பௌர்ணமி தினத்தில் பால் பாயாசம் செய்ய வேண்டும். மணக்க மணக்க பசு நெய் ஊற்றி, பசும்பாலில் பூஜை செய்த இந்த ஏலக்காய்களை தட்டி போட்டு, முந்திரி திராட்சை இவைகளை வறுத்து போட்டு மகாலட்சுமிக்கு பிடித்த வெள்ளை நிற பால் பாயாசம் செய்து, பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு இதை நெய்வேதியனமாக வைத்து உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரை சொல்லி ஒரு அர்ச்சனை செய்து, அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பாயாசத்தில் கட்டாயமாக நீங்கள் வீட்டில் பூஜை செய்த ஏலக்காய்களை சேர்த்து செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை மனதில் ஒரு கோரிக்கையை வைத்து இந்த பரிகாரத்தை செய்தால் அந்த கோரிக்கை சீக்கிரம் நிறைவேறும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீருவதற்கு இது ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் எளிமையான பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: அமாவாசை பௌர்ணமி தினத்தில் மட்டும் இதை செய்தால் போதும். நம்முடைய உடம்பில் கெட்ட சக்தியால் தங்கவே முடியாது. கெட்ட சக்தி ஊர் எல்லையைத் தாண்டி ஓடிவிடும்.

இந்த பூஜையை தொடங்கக்கூடிய நான் வெள்ளிக்கிழமையாக இருக்கட்டும். வளர்பிறை வெள்ளிக்கிழமை இருந்தால் என்னும் சிறப்பு. ஒரு முறை 11 நாள் இந்த பூஜையை செய்தாலே அதில் கிடைக்கும் மன நிறைவை நம்மால் வார்த்தையால் சொல்ல முடியாது. மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான ஆசையை பெற்று பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட இது ஒரு எளிமையான வழிபாட்டு முறை. நம்பிக்கை உள்ளவர்கள் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -