கோடி ரூபாயை கொட்டி தரும் கோதுமை பரிகாரம்

gothumai
- Advertisement -

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், கடின உழைப்பு ரொம்ப ரொம்ப முக்கியம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் கடினமாக மூட்டை தூக்கி உழைப்பவன் எல்லாம் பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்களா, என்று கேட்டால் நிச்சயம் கிடையாது என்று தான் சொல்லுவோம். காரணம் கடின உழைப்போடு சேர்ந்த சின்ன அதிர்ஷ்டமும் நமக்குத் தேவை.

நம்மை சுற்றி இருக்கும் நேரமும் காலமும் நமக்கு நல்லபடியாக செயல்பட்டால் தான் பணம் நம்மை தேடி வரும். பண தேவை பூர்த்தி செய்து கொள்ள உங்களுடைய வேலைகளை நீங்கள் செய்யுங்கள். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யும்போது, உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காத்து கொஞ்சம் அதிகமாக வீசும். பணக்கஷ்டம் விரைவாக தீரும். வருமானம் விரைவாக அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைக்கப்படும். அதற்கான பரிகாரங்கள் தான் இவை.

- Advertisement -

பணம் தங்க கோதுமை பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள். கோதுமை சிறிதளவு, ஒரு ரூபாய் நாணயம். நாளை வெள்ளிக்கிழமை. எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமி தாயார் பூஜை நடைபெறும். வழக்கம் போல வெள்ளிக்கிழமை பூஜை எப்படி செய்வீர்களோ, அதே போல செய்யுங்க. ஆனா, ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் அந்த மகாலட்சுமி தாயின் பாதங்களில் வைத்து, இந்த பூஜையை செய்யுங்கள்.

பூஜை செய்யும்போது வீட்டில் கட்டாயமாக மகாலட்சுமி போற்றி அல்லது லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்க வேண்டும். அந்த பாடல் வரிகளில் இருக்கும் நேர்மறை ஆற்றல், நீங்கள் செய்யும் பூஜையோடு கலந்து, உங்களுடைய வேண்டுதலுக்கும், நீங்கள் செய்யக்கூடிய பூஜைக்கும் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

- Advertisement -

பூஜை நிறைவான பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறது அல்லவா, அதை குடும்ப தலைவியின் கையால் எடுத்து கோதுமையில் புதைத்து வைக்க வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி பாட்டில் எடுத்துக்கோங்க. அதில் முதலில் இரண்டு கைப்பிடி அளவு கோதுமையை போட்டுக்கோங்க. அந்த கோதுமையில் பூஜை செய்த இந்த ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு புதைத்து மூடி சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்.

அவ்வளவு தான் பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்யும் போது நிறைய பணம் சேர வேண்டும். பணக்கஷ்டம் தீர வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். என்ற நேர்மறை யான வார்த்தைகளை சொல்லி பரிகாரத்தை செய்யுங்கள். அந்த கோதுமையையும் அடிக்கடி மாற்ற வேண்டாம். ஒரு ரூபாய் நாணயத்தையும் மாற்ற வேண்டாம். அது அப்படியே இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய வெற்றிலை பரிகாரம்

ஆறு மாதத்திற்கு ஒருமுறை பழைய கோதுமையை காக்கை குருவிகளுக்கு போட்டுவிட்டு புது கோதுமையை வைத்தால் போதும். பெண்கள் மனதார உங்கள் கையால் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு பணக்கஷ்டம் இல்லாமல் வாழும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -