பரம ஏழையும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கலாம். இந்த 1 பொருள் மட்டும் உங்கள் கையில் இருந்தால்.

jathikai
- Advertisement -

அப்பா சம்பாதித்த சொத்து, தாத்தா சம்பாதித்த சொத்து என்று அதில் சுகபோகமாக வாழ்பவர்கள் தங்களை செல்வந்தர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது. தான் சுயமாக சம்பாதித்து, சொந்த காலில் நின்று, தேவைக்கு ஏற்ப மட்டும் தன் கையில் பணத்தை வைத்து நிம்மதியாக வாழ்பவன் தான் உண்மையான செல்வந்தன்.  இருப்பினும் நாமும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும். அதிகமாக வேண்டாம். நமக்கென்று ஒரு வீடு, கொஞ்சம் சேமிப்பு, கொஞ்சம் தங்க நகை, வெள்ளி நகை இவைகளை அடுத்த தலைமுறை கைக்கு கொடுக்க வேண்டும் என்றால், நாம் என்ன பரிகாரம் செய்யலாம். ஏழையாக இருப்பவனை கூட, பணக்காரனாக மாற்றக்கூடிய ஜாதிக்காய் பரிகாரத்தை தான் இங்கு நாம் பார்க்க போகின்றோம்.

ஏழையை பணக்காரனாக மாற்றும் ஜாதிக்காய் பரிகாரம்:
இந்த ஜாதிக்காய்க்கு அதிகமான மருத்துவ குணம் உள்ளது. அதற்கு ஈடான மகத்துவமும் இருக்கிறது. இன்று நாம் மருத்துவத்தை பற்றி பார்க்க போவது கிடையாது. வெறும் மகத்துவத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அந்த காலத்திலேயே செல்வ வளம் அதிகரிக்க இந்த ஜாதிக்காயை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அந்த பரிகாரங்களில் இருந்து சிலவற்றை எளிமையான முறையில் எடுத்து உங்களுடன் பகிர்ந்துள்ளோம்.

- Advertisement -

ஜாதிக்காய் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜாதிக்காயிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த ஜாதிக்காய் எண்ணெயை விளக்கேற்றும் எண்ணெயோடு கலந்து விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வக் கடாட்சம் கொழிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, 2 ஸ்பூன் ஜாதிக்காய் எண்ணெய் விட்டு, திரி போட்டு வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த தீபத்திற்கு முன்பு முன்பாக அமர்ந்து வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் உங்களுடைய வேண்டுதல் ஒரு சில நாட்களில் அப்படியே பலிக்கும்.

சில பேர் வியாழக்கிழமை அன்று குபேர தீபம் ஏற்றக்கூடிய பழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்த குபேரர் விளக்கில் நீங்கள் நல்எண்ணெய் ஊற்றினாலும் சரி, அல்லது தேங்காய் எண்ணெய் நெய் எது ஊற்றி விளக்கு ஏற்றினாலும் சரி அதில் 1 ஸ்பூன் இந்த ஜாதிக்காய் எண்ணெயை கலந்து விடுங்கள். உங்களுக்கு குபேரரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

பணம் வைக்கும் பெட்டியில் எப்போதும் ஒரு ஜாதிக்காயை வையுங்கள். பணம் பெட்டியில் பணம் எப்போதும் நிரம்பி இருக்கும். அந்த காலத்தில் கல்லாப்பெட்டியில் எப்போதுமே நம்முடைய முன்னோர்கள் ஒரு ஜாதிக்காயை போட்டு வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிவப்புத் துணியில் 3 ஜாதிக்காயை வைத்து முடிச்சாக கட்டி நிலை வாசல் படியில் கட்டி விட்டால் போதும். வீட்டிற்குள் நல்லது மட்டும்தான் வரும். கெட்டது நுழையாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஷேமமாக ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக, இருப்பார்கள். இப்படி சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு தானாக வேலை செய்ய வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். சோம்பேறித்தனம் நெருங்காது. பிறகு நிறைய பணம் சேர தொடங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: சமையலறை மேடை மேல் வைக்கவே கூடாத 5 டப்பாக்கள். இந்தப் பொருட்களை எல்லாம் சமையல் மேடையில் வைத்தால் வீட்டில் தரித்திரம் பிடிப்பது உறுதி. பணக்கஷ்டம் வரத்தான் செய்யும்.

அவ்வளவு தான். கஷ்டங்கள் எல்லாம் தீருவதற்கு அந்த ஆண்டவன் நமக்காக கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் இந்த ஜாதிக்காய். இதை சரியான முறையில் பயன்படுத்தி மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றினாலே போதும். நல்லது நடக்கும். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -