அதிர்ஷ்டத்தையும் அளவில்லா செல்வத்தையும் அள்ளித்தரும் கண்ணாடி பரிகாரம்.

mahalashmi5
- Advertisement -

நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இரண்டு விஷயங்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிர்ஷ்டம் ஒருவருக்கு எந்த ரூபத்தில் எப்படி அடிக்கிறது என்று சொல்லவே முடியாது. உங்களுக்கு நேரம் நல்லா இருந்தா அதிர்ஷ்டம் அடிக்கும். நேரம் நன்றாக இல்லை என்றால் வரக்கூடிய அதிர்ஷ்டம் கூட துரதிஷ்டமாக மாறிவிடும்.

யார் கண்டது இந்த பரிகாரத்தின் மூலமாக கூட உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புகள் உள்ளது. சரிங்க அதிர்ஷ்டத்தை நம் பக்கம் அழைக்க என்ன பரிகாரம் செய்யலாம். இதோ ஆன்மீகம் சொல்லும் அழகான பரிகாரங்கள் உங்களுக்காக.

- Advertisement -

காசு தரும் கண்ணாடி பரிகாரம்

நாம் எல்லோர் வீட்டிலும் ஒரு கண்ணாடி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல கண்ணாடிகள் இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி எப்போதுமே பளிச்சென சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்காக திட்டு திட்டாக விரல்களின் அச்சு படிந்து இருக்கவே கூடாது. எந்த வீட்டில் கண்ணாடி சுத்தமாக அழகாக இருக்கிறதோ அந்த வீட்டில் ஐஸ்வர்யம் தங்கும்.

பாத்ரூம் கண்ணாடி கூட துடைத்து சுத்தமாகத்தான் இருக்கும். அதே போல பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் குட்டியா சின்ன கண்ணாடி வையுங்க. பீரோவுக்கு உள்பக்கத்தில் தான் உங்களுடைய பணமானது அந்த கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். கண்ணாடியை பீரோவுக்கு உள்பக்கம் பார்த்தபடி திருப்பி வைக்கவும்.

- Advertisement -

அப்போது பணம் இரண்டு மடங்மாக உங்களுக்கு தெரியும் அல்லவா. அதே போல உங்கள் வீட்டில் பண வரவும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். பீரோவில் பணம் இரண்டு மடங்காக சேரும். கண்ணாடி வைத்த பர்ஸ் வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம். ஆனால் பர்ஸில் பணம் இல்லாமல் விடக்கூடாது.

காலியாக இருக்கக்கூடிய இடத்தில் கண்ணாடி இருந்தால் வெற்றிடத்தை தான் மீண்டும் அது பிரதிபலிப்புக்கும். அப்போது உங்களுக்கு பைசா இல்லாத பர்ஸ் இன்னும் இன்னும் பைசா இல்லாத பர்ஸ்சாகத்தான் மாறும். கண்ணாடி வைத்த பர்ஸில் எப்போதுமே ஒரு பத்து ரூபாய் நோட்டு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோலத்தான் பீரோவிலும் கண்ணாடி வைத்து விட்டீர்கள் என்றால் அதில் கட்டாயம் காசும் இருக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் வீட்டு கண்ணாடி சுத்தமாக இருக்கும்போது நீங்கள் அந்த கண்ணாடியில் உங்களுடைய முகத்தை சந்தோஷமாக பார்க்கும்போது உங்களுடைய வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாக பிரதிபலிக்கும். வாரத்தில் இரண்டு நாளோ அல்லது தினம் தோறும் கூட உங்களுடைய வீட்டில் சாமி கும்பிடும் பழக்கம் இருக்கும்.

ஊதுவத்தி சாம்பிராணி தூபம் இவைகளை சுவாமிக்கு காண்பிப்பது போல அந்த கண்ணாடிக்கும் காண்பீர்கள். இறைசக்தி உங்களுடைய வீட்டில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அடுத்தபடியாக அதிர்ஷ்டம் தரக்கூடிய இரண்டாவது விஷயத்தை பார்ப்போம். பச்சை நிற பட்டாம்பூச்சி. இது அரிதானது. ஆனால் பச்சை நிற பட்டாம்பூச்சியை நீங்கள் பார்த்து விட்டால் உங்கள் மனதில் இருக்கும் பண தேவையை உடனடியாக பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த பூஜையில் கலந்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

பச்சை நிற பட்டாம்பூச்சி பார்க்கும் போது நாம் மனதில் நினைத்த வேண்டுதல் அப்படியே நடக்கும். பச்சை நிற பட்டாம்பூச்சியை பார்த்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பது உறுதி. திடீர் பணக்காரராகக் கூடிய யோகம் கூட வர நிறைய வாய்ப்புகள் உள்ளது. இனி பச்சை நிற பட்டாம்பூச்சியை பார்க்கும் போது நேர்மறையாக வேண்டுதலை வைத்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். மேல் சொன்ன அதிர்ஷ்டம் தரும் இந்த இரண்டு விஷயங்களிலும் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -