பணம் கொட்ட கொட்டை பாக்கு பரிகாரம்

cash
- Advertisement -

எல்லோருக்கும் எல்லோர் வீட்டிலும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நமக்கு மிஞ்சி இருப்பதோ பணக்கஷ்டம் மட்டும் தான். பண கஷ்டத்திலிருந்து வெளிவர ஏதாவது வழி கிடைக்காதா என்று எல்லா திசைகளிலும் பரிகாரங்களை தேடுகின்றோம்.

ஆனால் கஷ்டம் மேலும் அதிகமானது தான் மிச்சம். பணத்தேவை அதிகம் இருக்கிறது. வரக்கூடிய வருமானம் அதற்கும் குறைவாக இருக்கிறது என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். செலவுக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப வருமானம் பெறுகும்.

- Advertisement -

செலவுக்கு ஏற்ப வருமானம் பெருக பரிகாரம்

தேவைக்கு ஏற்ப வேண்டுதல் வைத்து, பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. அளவுக்கு மீறி ஆசைப்பட்டு பரிகாரங்களை செய்வது, பண வரவை கொடுக்காது. மீண்டும் அது பண கஷ்டத்தை கொடுத்து விடும். பாத்துக்கோங்க. சரி இப்போது பரிகாரத்தை பார்த்து விட்டோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான இலை கற்பூரவள்ளி இலை.

கற்பூரவள்ளியின் மருத்துவ குணம் நம் எல்லோருக்கும் தெரியும். இதற்கு பரிகாரத்தில் மகத்துவமும் அதிகமாக இருக்கிறது. ஒவ்வோரு வீட்டிலும் இந்த கற்பூரவள்ளி இலையை வைத்து வளர்க்க வேண்டும். சின்ன கற்பூரவள்ளி கிளையை  உடைத்து, மண்ணில் நட்டு வைத்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து வந்தாலே போதும். அந்தச் செடி தொட்டியில் துளிர் விட்டு நன்றாக வளர்ந்து விடும்.

- Advertisement -

வாரம் தோறும் வெள்ளி செவ்வாய் கிழமைகளில், நம்முடைய வீட்டில் வெற்றிலை பாக்க வைத்து பூஜை செய்யும் வழக்கம் இருக்கும் அல்லவா. அதே போல இனி வரக்கூடிய நாட்களில், இந்த கற்பூரவள்ளி இலைக்கு மேல் கொட்டை பாக்கை வைத்து, பூஜை செய்யுங்கள். கற்பூரவள்ளி இலைக்கு மேல் கொட்டைப்பாக்கை வைப்பது அதீத அதிர்ஷ்டத்தை ஈர்த்துவந்து உங்களிடம் சேர்க்கும்.

‘தேவைக்கு ஏற்ப பணத்தை கொடு இறைவா’ ‌என்று இந்த வழிபாட்டில் மனம் உருகி மகாலட்சுமியையும், இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் பண கஷ்டத்திற்கு ஒரு தீர்வினை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும். பூஜையை முடித்துவிட்டு கொட்டைப்பாக்கையும், இந்த கற்பூரவள்ளி இலையும் என்ன செய்வது.

- Advertisement -

ஓடும் தண்ணீரில் விடலாம். அப்படி இல்லை என்றால் இந்த கொட்டை பாக்குகளை எல்லாம் ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்து வாருங்கள். கொஞ்சம் மொத்தமாக சேர்ந்த பிறகு யாராவது வெற்றிலை பாக்கு போடுபவர்களுக்கு இதை தானமாக கொடுக்கலாம். தவறு கிடையாது. அப்படி இந்த பாக்கை வாங்க யாரும் இல்லை என்றால், இதை ஒன்றும் இரண்டு மகா நன்றாக இடித்து விடுங்கள்.

கூட கொஞ்சம் சர்க்கரை போட்டு கலந்து, கால்படாத இடங்களில் ஊருக்கு ஒதுக்கப்புறமாக செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள். அதை வாயில்லா ஜீவன்கள் சாப்பிட்டுக் கொள்ளும். காய்ந்த அந்த கற்பூரவள்ளி இலைகளை செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள். எளிமையான பரிகாரம்தான். வாரத்தில் இரண்டு நாள் வீட்டில் இந்த பூஜையை செய்யும் போது, வற்றாத செல்வ வளம் வீட்டில் ஊற்றெடுப்பதை உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: பீரோவில் பணம் சேர்க்கும் பரிகாரம்

இந்த பூஜையை செய்ய வாய்ப்புகள் இல்லை. எங்களுக்கு நேரமே இல்லை என்பவர்கள். இந்த செடியை மட்டுமாவது நிலை வாசலுக்கு வெளியில் வைத்து சின்ன தொட்டியில் வளர்த்து வாருங்கள். இந்த செடி செழிப்பாக வளர வளர உங்கள் செல்வ செழிப்பும் நிச்சயம் வளரும். வீட்டுக்கு பின்பக்கம் இந்த செடியை வைப்பதை விட, தொட்டியில் வீட்டுக்கு முன் பக்கம் இந்த செடியை வைத்து வளர்ப்பதில் அதிகம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நிறைவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -