கிராம்பை பீரோவில் இப்படி வைத்தால், கட்டு கட்டாக பணத்தை காந்தம் போல உங்கள் வீட்டு பீரோ இழுத்து உள்ளே வைத்துக் கொள்ளும்.

money
- Advertisement -

கட்டு கட்டாக பணத்தை பீரோவில் கொட்டி வைத்துக் கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது. நினைத்தாலே எல்லோருக்கும் ஆசை வரத்தானே செய்யும். கட்டு கட்டாக பணத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஆசையோடு பணத்தை சம்பாதிக்க வேண்டும். உழைக்கும் போது சந்தோஷமாக உழைக்க வேண்டும். கஷ்டப்பட்டுக் கொண்டே நாம் செய்யக்கூடிய வேலையில் இருந்து கிடைக்கக்கூடிய பணம் நம் கைக்கு வந்தாலும் நிலையாக தாங்காது. அதாவது இஷ்டம் இல்லாமல் வேண்டா வெறுப்பாக வேலை செய்து சம்பாதிக்க கூடிய பணத்தால் நமக்கு நன்மை நடக்காது. இஷ்டப்பட்டு சந்தோஷமாக ஒரு வேலையை செய்து சம்பாதித்து பணத்தை வீட்டுக்கு கொண்டு வாருங்கள். அந்த பணம் நிச்சயம் வீண்விரையும் ஆகாமல் உங்கள் கையிலே தங்கும். நல்ல விஷயத்திற்காக மட்டுமே அந்த பணம் செலவாகும்.

இந்த பரிகாரத்திற்கு பணத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய இரண்டு பொருட்களை நாம் பயன்படுத்த போகின்றோம். கிராம்பு, பச்சை கற்பூரம். பெரும்பாலும் இந்த இரண்டு பொருட்களும் பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருட்கள் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் ‌அல்லவா. அதனால் பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

- Advertisement -

முதலில் கிராம்பை நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். முழு கிராம்பில் இருந்து வெளிவரக் கூடிய வாசத்தை விட, இந்த பொடியில் இருந்து வெளிவரக்கூடிய கிராம்பு வாசம் அதிகமாக இருக்கும். கிராம்பு பொடி 1 ஸ்பூன், பச்சை கற்பூரத்தூள் 1 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு ஒரு பச்சை காட்டன் துணியில் வைத்து முடிச்சு போட்டு பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான். இந்த வாசம் வெளிவரும் போது உங்கள் வீட்டு பணம் வைக்கும் பெட்டியில் பணம் பல மடங்காக பெருக தொடங்கிவிடும்.

இந்த முடிச்சை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதும். அதாவது அந்த முடிச்சிலிருந்து வெளிவரக்கூடிய வாசம் குறையும் போது முடிச்சுக்கு உள்ளே இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதியதாக இரண்டு பொடியையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை வேறு எந்த இந்த இடத்தில் வைத்து எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம். இதே போல ஒரு முடிச்சை முடிந்து நகை வைக்கும் பெட்டியில் வைக்கலாம். நகை அடகு போகாமல் நல்லபடியாக நம் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும். இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றால் இதேபோல ஒரு முடிச்சை தயார் செய்து தலையணைக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாசம் மன நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

குழந்தைகளுக்கு ஒரு சின்ன வெள்ளி தாயத்தில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு கழுத்தில் மாட்டி விட்டால் அவர்களை தேவையில்லாத கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியும் அண்டாமல் இருக்கும். (கிராம்புத்தூள் பச்சைக் கற்பூரத்தூள் இரண்டையும் ஒன்றாக பொடி செய்து அப்படியே தாயத்தில் போட்டு மூடி விடுங்கள்.) இவ்வளவு நன்மைகளை நமக்கு கொடுக்கக்கூடிய வாசம் நிறைந்த பொருட்கள் தான் இந்த இரண்டு பொருட்களுமே. நம்பிக்கையோடு மேல் சொன்ன பரிகாரங்களை முயற்சி செய்தால் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -