செல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்

sivan
- Advertisement -

இந்த உலகில் உள்ள யாருமே செல்வத்தை வேண்டாம் என்றும் சொல்ல மாட்டார்கள். அதே போல், தான் சேர்த்த செல்வதை எப்படி அதிகரிக்க செய்ய வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். செல்வதை சேர்க்கவும், சேர்த்த செல்வதை பெறுக செய்யவும் ஒரு அற்புதமான பதிகம் இருக்கிறது. தினமும் திருநீறு பூசிக்கொண்டு சிவபெருமானை நினைத்து கீழே உள்ள பதிகத்தை சொன்னால் நிச்சயம் செல்வம் சேரும்.

lingam

பதிகத்தை அருளியவர் திருஞானசம்பந்த. அவர் சிவ பெருமானை நோக்கி இந்த பதிகத்தை பாடியபோது அவருக்கு சிவபெருமான், ஆயிரம் பொன் கொண்ட ஒரு பாத்திரத்தை கொடுத்தார். அதோடு அந்த பாத்திரத்தில் உள்ள பொற்காசுகளை எவ்வளவு எடுத்தாலும் அதில் இருக்கும் பொற்காசுகள் குறையவே குறையாது என்று அருளினார்.

- Advertisement -

குறிப்பு: இந்த பதிகம் சற்று பெரியது என்பதால் நேரம் இருப்பவர்கள் மட்டும் இதை படியுங்கள். முழுமையாக படிக்க நேரம் இருக்காது என்று நினைப்பவர்கள் இந்த லிங்கை சேவ்(save) செய்துகொண்டு பிறகு படியுங்கள். இதோ அந்த அற்புத பதிகம்.

பணம் தரும் பதிகம்:

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கி வேதியனே

- Advertisement -

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனேவாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்

போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனேநனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்

- Advertisement -

புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
கைம்மல்கு வரிசிலைகி கனை ஒன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனேகையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி

மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனேவெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா

ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படிஅழல் எழ விழித்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே.பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை

ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனேஉண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா

கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றாமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்பட் கருள்செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனேஅலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன

விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.

இதையும் படிக்கலாமே:
வினாயகர் சதுர்த்தி மந்திரங்கள்

English Overview:
Here we have Tamil mantra to increase Money. Shivan mantra in Tamil to get money.

- Advertisement -