பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரத்தை வீட்டின் இந்த மூலையில் வைத்து விட்டால் போதும். வாசலுக்குள் பஞ்சம் என்ற வார்த்தை நுழையவே நுழையாது.

cash-pachai-karpooram
- Advertisement -

நல்ல வாசனைக்கு எப்போதுமே ஒரு சக்தி உண்டு. நல்ல வாசம் இருக்கக்கூடிய வீட்டில் கெட்ட சக்தி தங்காது. வாரம் தோறும் செவ்வாய் வெள்ளிக்கிழமையில், சாம்பிராணி புகை போட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணமே அதுதான். வீட்டில் இருக்கும் துர் சக்திகளை, இந்த நல்ல வாசமானது துரத்தி விரட்டி அடித்து விடும். அந்த வரிசையில் பணத்தை ஈர்க்கக்கூடிய வாசம் நிறைந்த பச்சை கற்பூரத்தை நம்முடைய வீட்டில் எந்த மூலையில் வைத்தால் பணவசியம் ஏற்படும் என்பதைப் பற்றியும், இந்த பச்சை கற்பூரத்தை வேறு எந்த இடங்களில் எல்லாம் வைத்தால் வீட்டில் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பணம் தரும் பச்சை கற்பூரம் பரிகாரம்:
பணத்தை ஈர்க்கும் இந்த பச்சை கற்பூரத்தை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய முடிச்சாக கட்டி உங்களுடைய வீட்டில் குபேர மூலையில் வைக்க வேண்டும். குபேர மூலை என்றால் தென்மேற்கு மூலை. இந்த தென்மேற்கு மூலையானது எப்போதுமே வாசம் நிறைந்த இடமாக இருந்தால், அந்த வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். அந்த வீட்டில் பண கஷ்டமே வராது.

- Advertisement -

இந்த பச்சை கற்பூரமே வாசனை நிறைந்த ஒரு பொருள். பாசிட்டிவ் வைப்ரேஷன் நிறைவாக கிடைத்துக் கொண்டே இருக்கும். அந்த பச்சை கற்பூரத்திற்கு தினமும் விளக்கு ஏற்றும் போது, மாலை 6:00 மணிக்கு வாசனை நிறைந்த ஊதுவத்தி, சாம்பிராணி போடும்போது, இன்னும் அதிகமான பலனை நமக்கு கொண்டுவந்து சேர்க்கும். பிறகு வீட்டில் கடன் பிரச்சனை இருக்காது. மன நிம்மதியோடு சேர்ந்த வருமானம் வந்து கொண்டே இருக்கும். மஞ்சள் துணியில் இருக்கும் பச்சை கற்பூரம் கரைய கரைய புதுசாக வைத்து கொண்டே இருங்கள். பிறகு உங்கள் வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே கவனித்துக் பாருங்கள்.

அடுத்தபடியாக இந்த பச்சை கற்பூரத்தை வேறு எந்த இடத்தில் எல்லாம் வைத்து பயன்படுத்தலாம். எப்போதுமே பூஜை அறையில் இந்த பச்சை கற்பூரம் வாசம் நிறைந்து இருந்தால் இறை அருள் நிறைவாக கிடைக்கும். சமையலறையில் கூட ஒரு மூலையில் இந்த பச்சை கற்பூரத்தை திறந்தபடி ஒரு கிண்ணத்தில் போட்டு வையுங்கள். சமையலறை வாசமாக இருக்கும். குழந்தைகள் படிக்கின்ற இடம், குழந்தைகள் புத்தகம் வைத்து இருக்கின்ற இடம், என்று எல்லா இடங்களிலும் பச்சை கற்பூரத்தின் வாசம் நிறைவாக இருக்கலாம்.

- Advertisement -

குறிப்பாக பணம் வைக்கும் பீரோ, நகை வைக்கும் பெட்டி, என்று எல்லா இடங்களிலும் இந்த பச்சை கற்பூரத்தை போட்டு வையுங்கள். பச்சைக் கற்பூரத்தின் விலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் பச்சைக் கற்பூரத்தை வாங்க வாங்க உங்களிடம் செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதும் நிதர்சனமான உண்மை. மாத ஜாமான்கள் போடும் பட்டியலில், இனி கட்டாயம் இடம்பெற வேண்டிய பொருட்களில் இந்த பச்சை கற்பூரமும் ஒன்றாக இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: அம்மனின் அனுகிரகம் பெற்ற இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். எந்த துர்தேவதைகளும், தீயசக்திகளும் உங்கள் நிலை வாசலை தாண்டி உள்ளே வரவே வராது.

பட்டியலில் கல் உப்புக்கு அடுத்த இடத்தில் இந்த பச்சை கற்பூரத்தை வையுங்கள். பிறகு பாருங்கள் உங்களுடைய வீட்டில் வறுமை பஞ்சம் பணக்கஷ்டம் என்ற ஒன்று வாசலுக்குள் நுழையவே நுழையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -