அம்மனின் அனுகிரகம் பெற்ற இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். எந்த துர்தேவதைகளும், தீயசக்திகளும் உங்கள் நிலை வாசலை தாண்டி உள்ளே வரவே வராது.

amman sulam
- Advertisement -

முன்பெல்லாம் வீட்டை கட்டும் பொழுது வாசல் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது முதல் வீட்டின் ஒவ்வொரு அறைகள் வரை பார்த்து பார்த்து கட்டி வந்தார்கள். இன்றும் வாஸ்து அடிப்படையில் தான் எல்லோரும் வீடு கட்டி வாழ்கிறார்கள். இதையெல்லாம் சரிவர செய்த பின்னும் வீட்டில் தலைவாசல் ஆனது வீட்டில் உள்ளவர்களின் ராசிக்கு சரியான படி அமையாவிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தலைவாசல் எந்த திசையில் இருந்தால் நல்லது என்றும் ஒரு வேளை அப்படி இல்லாமல் போனால் அதற்கான பரிகாரம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தலைவாசல் சரியாக அமைய வேண்டும் என்பது சொந்தமாக வீடு கட்டுபவர்கள் தீர்மானித்து கட்டலாம். ஆனால் வாடகை வீட்டில் வாழ்பவர்கள் வீடு கிடைத்தால் போதும் என்கிற நிலைமை தான் இப்போது உள்ளது இது போன்ற சூழ்நிலையில் வீட்டின் தலை வாசலை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சில நேரங்களில் வீடு அந்த திசையில் தான் கட்ட முடியும் வேறு வழியும் இருக்காது. இன்றைய அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் இது போன்ற சிக்கல்கள் நிறையவே உண்டு. இவற்றையெல்லாம் எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

எப்போதுமே ஒரு வீட்டின் தலைவாசல் கிழக்கு, மேற்கு பார்த்தவாறு இருப்பது மிகவும் நல்லது. அதிலும் கிழக்கு வாசல் அமைந்தால் மிகவும் விசேஷம். இதில் வடக்கு வாசல் அமைந்தால் நல்லது என்று பெரும்பாலும் வடக்கு வாசலை இன்று தேர்வு செய்கிறார்கள். இதற்குக் காரணம் வடக்கு வாசல் பெருமாளை குறிக்கும். இந்த வாசல் வைத்தால் செல்வம் அதிகரிக்கும் பண வரவு தாராளமாக இருக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது அதுவும் உண்மை தான்.

ஆனால் வடக்கு வாசல் வைத்த வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது வடக்கு திசை பார்த்து வெளியில் செல்கிறோம். வீட்டிற்கு திரும்பி வரும் போது வடக்கில் இருந்து தெற்கு பார்த்தபடி தான் நாம் உள்ளே நுழைவோம். தெற்கு வாசல் ஆனது மயானத்தை குறிக்கும். அப்போது அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் விரயமாகத் தான் செய்யும். அது மட்டும் இன்றி கெட்ட சக்திகளும் உங்களை ஆட்டிப் படைக்கும்

- Advertisement -

நம்மில் பெரும்பாலான வீட்டில் தொடர்ந்து பூஜை புனஸ்காரங்கள் செய்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தாலும் கூட, ஏன் பணமே தாராளமாக வந்தாலும் கூட வீட்டில் தங்காமல் வீண் விரையம் மருத்துவ செலவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று புலம்வோம். அதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த ஒரு விஷயத்தையும் இனி கவனத்தில் கொண்டு வீடு பார்ப்பதோ,கட்டுவதோ சிறந்தது.

தெற்கு திசை பார்த்த வீட்டில் உள்ள பிரச்னையை சரி செய்ய
ஒரு வேளை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இது போன்ற வாசல் அமைந்து வீடாக இருந்தால் அதற்கு எளிய பரிகாரமாக இதை செய்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்திற்கு சென்று நல்ல எலுமிச்சை பழமாக ஒன்றை வாங்கி அம்மனின் காலடியில் வைத்து வணங்கிய பிறகு, அந்த பழத்தை அங்கிருக்கும் சூலாயுதத்தில் சொருகிய பின் எடுத்து வந்து உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்த வாரம் வியாழக்கிழமை அன்று இந்த பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு, மீண்டும் வெள்ளிக்கிழமை இதே போல் வேறு ஒரு பழத்தை வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க ஆசைகள் அனைத்தையும் ஈடேற்ற கூடிய அதிசய சூட்சும பரிகாரம். இந்த சூட்சமத்தை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத அதிசயங்கள் எல்லாம் ஐந்தே நாளில் நடக்கும்.

இதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் கெட்ட சக்திகளிடம் இருந்தும் உங்கள் குடும்பத்தை காத்து கொள்ளலாம். உங்கள் வீட்டு நிலை வாசலும் இதே போல் இருந்தா இந்த பரிகார முறையை பயன்படுத்தி பயனடையுங்கள்.

- Advertisement -