தீராத பண கஷ்டத்தை கூட தீர்த்துவைக்கும் திருநீற்றுப்பச்சிலை. பண கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த 1 இலை போதும்.

cash
- Advertisement -

தீராத பண கஷ்டம் உள்ளது. வரக்கூடிய பணம் கையில் நிலையாக தங்கவில்லை. கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது எனும் பட்சத்தில் பின் சொல்லக்கூடிய இந்த சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணக்கஷ்டத்திற்க்கு உண்டான தீர்வு கிடைக்கும். திருநீற்றுபச்சிலை மருத்துவ குணங்கள் நிறைந்த, மகத்துவம் கொண்ட ஒரு இலை. இந்த இலையை வைத்து பணம் சேர சக்திவாய்ந்த சுலபமான ஒரு தாந்த்ரீக பரிகாரம் இதோ உங்களுக்காக.

திருநீற்றுப்பச்சிலை செடி உங்களுடைய வீட்டின் அருகில் இருந்தால் அதிலிருந்து ஒரே ஒரு இலையை மட்டும் பறித்து எடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டின் அருகில் இந்த செடி இல்லை உங்களுக்கு திருநீற்றுப் பச்சிலை எப்படி இருக்கும் என்று தெரியாது என்றால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து அவர்களிடம் இந்த இலையை எடுத்து வரச் சொன்னால் நிச்சயமாக கொண்டு வந்து தருவார்கள். ஏதோ ஒரு தொகையை கொடுத்து அந்த இலையை வாங்கிக் கொள்ளுங்கள். இலவசமாக அடுத்தவர்கள் கையில் இருந்து இலையை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

- Advertisement -

வாங்கி வந்த இலையை சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு துடைத்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு மகாலட்சுமி தாயாரையும் மனதார வேண்டிக்கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து இந்த திருநீற்றுப்பச்சை இலையில் வைத்து சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி வலது உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

வேண்டுதல் முடித்த பின்பு கையில் இருக்கும் இலையை கீழே வைக்கக்கூடாது. அப்படியே இந்த இலை முடிச்சை எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். இந்தப் பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த வெள்ளிக்கிழமை இந்த  பரிகாரத்தை மீண்டும் செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்த வாரம் பரிகாரம் செய்யும் போது பணப் பெட்டியில் இருக்கும் பழைய திருநீற்றுப் பச்சிலையை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு அதில் வைத்த அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் மீண்டும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருநீற்றுப்பச்சிலையை புதியதாக வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து முடிக்கும் போது உங்களுடைய தீராத கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு நிச்சயம் கிடைத்திருக்கும். மூன்று வாரம் கழித்து ஒரு ரூபாய் நாணயத்தை ஏதாவது ஒரு கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று வாரத்திற்கு பின்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இந்த திருநீற்றுபச்சிலை குரு பகவானுக்கு உரிய இலையாகவும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே ஜாதக கட்டத்தில் குருபகவானால் ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவர்கள், தங்களுடைய வீட்டில் இந்த திருநீற்றுப் பச்சிலைச் செடியை வளர்த்து வர வேண்டும். அதாவது துளசிச் செடியை எப்படி தெய்வ அம்சம் கொண்ட செடியாக வளர்க்கின்றோம். அதேபோல இந்த திருநீற்றுப் பச்சிலைச் செடியை வைத்து வளர்க்கும் போது குரு பகவானால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும். குரு பகவானின் ஆசி கிடைக்கும். ஒரு வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக இருந்தால் இந்த செடியை வடமேற்கு திசையில் வைத்து வளர்த்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

- Advertisement -