வருமானம் இரட்டிப்பாக வேண்டுமா? அடிக்கடி இந்த பூவை வாங்கிக் கொண்டே இருந்தால், அமோகமான பண வரவு இருக்கும்.

sukkiran1
- Advertisement -

பண வரவு உண்டாக எளிமையான ஒரு தாந்திரீக குறிப்பு தான் இது. இந்த குறிப்பை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இதை நீங்கள் பரிகாரம் என்று நினைத்து செய்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை பெறுவதற்காக இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, உங்களுக்கு பணம் வரப்போவது மட்டும் நிச்சயம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அடிக்கடி இந்த ஒரு பூவை வாங்க வேண்டும். அடிக்கடி இந்த செடியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த பூவை கையில் வைத்துக் கொண்டால் கூட நமக்கு நிறைய நல்லது நடக்கும். வருமானம் பெருகும். அது என்ன பூ என்பது மேலே புகைப்படத்தை பார்த்த உடனேயே உங்களால் நிச்சயம் கண்டுபிடிக்க முடிந்திருக்கும். பன்னீர் ரோஜா தாங்க அந்த பூ. இந்த பூவை பரிகாரத்திற்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை விரிவாக இந்த பதிவுக்குள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பண வரவை தரும் பன்னீர் ரோஜா பரிகாரம்:
பன்னீர் சுக்கிர பகவானுக்கு விருப்பமான வாசனை பொருள். அந்த பன்னீருக்கே உரிய ரோஜா பூவை, அடிக்கடி காசு கொடுத்து நாம் வாங்கும் போது சுக்கிரனின் அனுகிரகம் கிடைக்கும். சுக்கிரனின் அருள் ஆசியால், பணப்பழக்கம் அதிகரிக்கும். ஆகவே வீட்டில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை என்றால் சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்யவோ, உருளியில் பூக்களை வைக்கவோ, இந்த பன்னீர் ரோஜாவை விலை கொடுத்து வாங்குங்கள். 20 ரூபாய்க்கு வாங்கினால் கூட அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதிகம் செலவு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

தினமும் இரண்டு பன்னீர் ரோஜா இதழ்களை பர்ஸில் வைத்துக் கொண்டால், பர்ஸில் பணம் இல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. ஆனால் தினம் தினம் பழைய பன்னீர் ரோஜாவை எடுத்து போட்டு விட்டு, புதிய பன்னீர் ரோஜா இதழ்கள் இரண்டை வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் பணப்பெட்டியில் கூட ஒரு பன்னீர் ரோஜாவை தினமும் வைத்தால் சுபிட்சம் தான்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் செடி வைக்க இடம் இருந்தால் ஒரு சின்ன தொட்டியிலாவது பன்னீர் ரோஜா செடியை வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி வளர்ந்து வாருங்கள். அதில் பூத்துக் குலுங்கும் பன்னீர் ரோஜாவை தினம் தினம் பார்க்கும்போது உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

முடிந்தால் பத்து பன்னீர் ரோஜா செடியை வாங்கி உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். அதாவது அன்பளிப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த பன்னீர் ரோஜா செடியை அன்பளிப்பாக கொடுப்பது நமக்கு நன்மை தரும். அதை அன்பளிப்பாக பெறுபவர்களுக்கும் நன்மை நடக்கும்.

- Advertisement -

இது எதுவுமே உங்களால் செய்ய முடியாது என்றால், பன்னீர் ரோஜா இருக்க கூடிய ஸ்டிக்கர், சீனரி புகைப்படம் இவைகளை அடிக்கடி கண்களில் தென்படும்படி மாட்டிக்கொள்ளுங்கள். பன்னீர் ரோஜா புகைப்படத்தை பர்சில் வைத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்களுக்கு சுக்கிர யோகத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் செய்யும் இடத்தில் லாபம் பெருகி பண மழை பொழிய ஐந்து ரூபாய் நாணயத்தை இதில் போட்டு வைத்து விடுங்கள். உங்க கல்லாப் பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும்.

அதாவது பன்னீர் ரோஜாவை நிஜமாக வாங்கி உங்களால் பயன்படுத்த முடியாது எனும் பட்சத்தில், இந்த ஸ்டிக்கர் புகைப்படங்களை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் நிஜ பன்னீர் ரோஜாவுக்கே பரிகாரத்தில் முதலிடம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -