கஷ்டப்படாமல் பணத்தை சம்பாதித்து சேர்க்க பரிகாரம்

cash2
- Advertisement -

ஓடி ஓடி உழைக்கின்றோம். கையில் 10 பைசா கூட தங்கவில்லை. ஆனால் சில பேர் அவர்களுடைய திறமையை வைத்து, போன போக்கில் பணத்தை சுலபமாக சம்பாதித்து விடுவார்கள். சம்பாதித்த பணத்தை வைத்து சீக்கிரம் சொத்து சுகம் சேர்ப்பார்கள். எப்படித்தான் இவர்கள் மட்டும், இவ்வளவு சீக்கிரத்தில் பணக்காரர்கள் ஆனார்கள் என்று நாம் யோசிப்பது உண்டு.

சில பேருக்கு அந்த அதிர்ஷ்ட யோகம் பிறவியிலேயே இருக்கும். பிறக்கும்போது ஒன்றுமே இல்லாமல் பிறந்து இருப்பார்கள். ஆனால் 30, 40 வயதை கடக்கும் போது அம்பது லட்சத்துக்கு சொத்து இருக்கும். இதெல்லாம் எப்படி சாத்தியம். அவர்களுக்கு இருக்கும் யோக திசை தான் இதற்கு காரணம். அதிர்ஷ்ட காற்று யார் பக்கம் வீசினாலும், அதிர்ஷ்ட லட்சுமி, மகாலட்சுமி அவர்கள் பக்கம் சென்றிடுவார்கள்.

- Advertisement -

உங்களுக்கும் யோகலட்சுமி கடாட்சமும், மகாலட்சுமியின் அருள் ஆசியும் தேவைப்படுகிறதா. பின் சொல்லக் கூடிய இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டம் உங்களுக்கும் அடிக்கும்.

சுலபமாக பணம் சம்பாதிக்க பரிகாரம்

அடுத்தவர்களை ஏமாற்றாமல் பணம் சம்பாதிக்கும் வழியை தேடுங்கள். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து, உங்களுடைய முயற்சிகளில் முழுமூச்சோடு இறங்கினால், முயற்சிகள் சீக்கிரம் வெற்றியடைந்து பணவரவு சீக்கிரம் அதிகரிக்கும்.

- Advertisement -

உதாரணத்திற்கு இந்த பரிகாரத்தை செய்து கொண்டே பெரிய வேலைக்கு முயற்சி செய்தால், அந்த வேலை கிடைத்து அந்த வேலையின் மூலம் வருமானம் பல மடங்காக பெருகும். இந்த பரிகாரத்தை செய்து கொண்டே, ஒரு தொழில் தொடங்கினால், அந்த தொழிலில் நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய லாபம் கிடைத்து, அந்த தொழிலை விரிவுபடுத்தக்கூடிய யோகம் உங்களுக்கு கிடைத்துவிடும்.

தொழிலில் நொடிந்து போய் நஷ்டம் அடைந்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கினால் அந்தத் தொழிலில் மேலும் மேலும் உயரலாம். இப்படி உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்குவிக்க கூடிய வகையில் இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் பட்டை பொடி. பட்டையை நீங்களே லேசாக வறுத்து அரைத்து பொடி செய்து கொண்டாலும் சரி, அல்லது கடைகளிலேயே பட்டை பொடி விற்கின்றது.

- Advertisement -

அதை வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்தினாலும் சரி. அந்த பட்டை பொடியை கொஞ்சமாக ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து அப்படியே இரண்டு சொட்டு எடுத்து உள்ளங்கைகளில் வைத்து அப்படியே தடவிக் கொள்ளுங்கள். இதை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, சாப்பிட்டு வீட்டில் இருந்து கிளம்பும்போது இந்த பரிகாரத்தை செய்யணும்.

இந்த கையோடு நீங்கள் பத்து ரூபாயை தொட்டாலும் அது 100 ரூபாயாக மாறும். தினமும் வியாபாரம் செய்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து கொண்டால் உங்கள் வியாபாரத்தில் எதிர்பார்க்காத அளவு லாபம் பெருகும். தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள் நிலைவாசலை கூட்டி கோலம் போட்டுவிட்டு, நிலை வாசல் படிக்கு 2 பக்கமும் இந்த பட்டை பொடியை தூவி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 27 நட்சத்திரங்களுக்கான அதி தேவதைகள்

தினமும் கோலம் போட்ட பிறகு இந்த பட்டை பொடியை தூவி விட வேண்டும். இந்த பட்டை பொடி வாசம் உங்கள் உள்ளங்கைகளிலும், உங்கள் நிலை வாசல் படியிலும் நிறைவாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பண வசியம் அதிகரிக்கும் எங்கிருக்கும் பணமும் உங்களைத் தேடி ஓடிவரும். தொடர்ந்து 48 நாள் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் போது உங்களுக்குள் ஏற்படக்கூடிய மாற்றம் உங்களை வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற்றி விடும். தேவைப்படுபவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -