கனவிலும் நினைக்காத வருமானம் உங்களைத் தேடி வரும். இந்த 3 பொருட்களை மட்டும் மண்ணில் புதைத்து வைத்து பாருங்கள்.

cash
- Advertisement -

நம்முடைய வாழ்நாளில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு தொகையானது கையில் கிடைக்க வேண்டும் என்ற பண ஆசை உங்களுக்கு இருக்குதா? கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத காசு பணம் சேர இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது என்னுடைய வாழ்நாளில் இந்த கடனை திருப்பி கட்டவே முடியாதுங்க. ஆயிசுக்கும் வட்டி மட்டும் தான் கட்ட முடியும், என்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்யலாம். வட்டியைத் தாண்டி அசலை கட்டக்கூடிய யோகத்தையும் இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும். பண வரவை கொடுக்கக்கூடிய, கடனை கரைக்கக் கூடிய, அப்படி ஒரு அற்புதம் வாய்ந்த சித்தர்களால் சொல்லப்பட்ட பரிகாரம் தான் இது. நம்பிக்கையோடு செய்தால் பலன் நூற்றுக்கு நூறு உறுதி.

பணம் தரும் வேப்ப மர பரிகாரம்:
வெள்ளி காசு, செம்பு காசு, இரும்பு காசு, இந்த மூன்று காசுகளை வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய சிறிய அளவில் இந்த காசு, நாட்டுமருந்து கடையில் கேட்டாலே கிடைக்கும். முதலில் இந்த மூன்று காசுகளை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை வேப்ப மரத்துக்கு அடியில் தான் செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் பக்கத்தில் வேப்பமரம் இருந்தாலும் சரி, உங்கள் வீட்டிலேயே வேப்பமரம் இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த இடத்தில் வேப்பமரம் இருந்தாலும் தேர்ந்தெடுத்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

கசப்பான கஷ்டத்தை தீர்க்கக்கூடிய கசப்பு சுவை நிறைந்த வேப்பமரம். அந்த வேப்ப மரத்துக்கு அடியில் லேசாக சின்ன குழி தோண்டி அதில் எடுத்து வைத்திருக்கும் இந்த மூன்று காசுகளையும் போட்டு மண்ணை போட்டு புதைத்து விடுங்கள். உங்களுடைய கஷ்டம் புதைந்து போக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பண கஷ்டம் தீருவதற்கும் இந்த பரிகாரம் பலன் கொடுக்கும். கடன் சுமை குறைவதற்கும் இந்த பரிகாரம் பலன் கொடுக்கும். அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு கஷ்டம் இருந்தால், அந்த கஷ்டம் தீரவும் இந்த பரிகாரம் செய்யலாம்.

தீராத நோய் தீர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆக மொத்தத்தில் உங்கள் கஷ்டத்திற்கு ஒரு சமாதி கட்ட இந்த மூன்று காசுகளையும் அந்த வேப்ப மரத்துக்கு அடியில் புதைத்து வைத்து அதன் மேலே இனிப்பு சுவை நிறைந்த ஏதாவது ஒரு பொருளை தூவி விட வேண்டும். நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, அரிசி மாவு வெள்ளம், சேர்த்த உணவு பொருளை எரும்பு சாப்பிடும் படி அந்த பொருள் இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை ஒரே ஒரு முறை செய்தால் கூட போதும்.

- Advertisement -

உங்களுடைய தீர்க்க முடியாத பெரிய அளவில் இருக்கும் பிரச்சனைகள் கூட, கூடிய விரைவில் சரியாக வாய்ப்புகள் உள்ளது. அந்த காலத்தில் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள, கஷ்டத்திற்கு சமாதி கட்டக்கூடிய பரிகாரம் தான் இது. ஒரே ஒரு முறை இதை நம்பிக்கையோடு செய்தாலே உங்கள் கஷ்டங்கள் குறையும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையை மாற்றி அமைக்க இந்த ஒரு குச்சி போதும். ஜெயிக்கவே முடியாது என்று நினைத்த காரியம் கூட ஜயத்தில் முடியும். காரிய சித்திக்கு சிறப்பான பரிகாரம்.

3 மாதங்களில் உங்களுடைய பிரச்சனைகள் தீரவில்லை என்றால், மீண்டும் மூன்று மாதம் கழித்து இந்த பரிகாரத்தை செய்யலாம். மொத்தமாக மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்தால் முழு பிரச்சனைகளுக்கும் சமாதி கட்ட முடியும். அவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -