கொடுத்த பணம் திரும்ப கிடைக்க

gurubhagavan manjal cash
- Advertisement -

பணம் சம்பாதிப்பதே போராட்டமாக இருக்கும் இந்த காலத்தில் சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது அதைவிட பெரிய போராட்டமாக இருக்கிறது. ஏனெனில் நம்மை சுற்றி உள்ளவர்களில் சிலர் அத்தனை மோசமாக இருக்கிறார்கள். திடீரென வருவார்கள் அவசரத்துக்கு பணத்தேவை என்று சொல்லி வாங்கி செல்வார்கள்.

அத்துடன் அவ்வளவு தான் திரும்பத் தர வேண்டும் என்ற எண்ணமே இருக்காது.நாம் திரும்ப கேட்டாலும் நம்மிடம் பகைமையை வளர்த்துக் கொள்வார்களே தவிர வாங்கிய பணத்தை திருப்பி தர மாட்டார்கள். இப்படி அனைவரும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு சிலர் இப்படித் தான் இருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி பணம் கொடுத்து ஏமாந்த பல நபர்கள் இருக்க தான் செய்கிறார்கள். அப்படியானவர்கள் தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற இந்த எளிமையான பரிகார முறையை செய்து பார்க்கலாம். இந்த பரிகாரம் பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இதற்கு பத்து ரூபாய்க்கு மட்டும் மஞ்சள் தூள் வாங்கிக் கொள்ளுங்கள் அதிகமாக வேண்டாம். அடுத்து ஒரு வெள்ளை நிறத்தால் இது இரண்டையும் கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு தீபத்தின் முன் அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கையில் இருக்கும் பேப்பரை தரையில் வைத்து விட்டு மஞ்சள் அதில் கொட்டி பரப்பி விடுங்கள். அதில் உங்களுக்கு யார் பணம் தர வேண்டுமோ அவரின் பெயரை எழுதுங்கள். அப்படி எழுதும் போது இவரிடம் இருந்து எனக்கு பணம் விரைவில் வர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த மஞ்சளை நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டு அவரிடம் சென்று பணத்தை கேளுங்கள். அதுமட்டுமின்றி இந்த மஞ்சளை நீங்கள் குளிக்கும் போது சிறிதளவு தண்ணீரில் கலந்து குளியுங்கள். இன்னும் அதிக பலனை கொடுக்கும். இப்படி செய்யும் போது நிச்சயம் அவர் பணத்தை திருப்பி தருவார் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

நீங்கள் மஞ்சளை அதிகமாக வாங்கி வைத்து விட்டீர்களானால் அதை அத்தனை நாளும் நெற்றியில் வைக்க வேண்டும் இந்த மஞ்சளை கீழே போடக் கூடாது திலகமாக வைத்தும் தண்ணீரில் கலந்தும் தான் பயன்படுத்த வேண்டும்.இத்துடன் வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்து வரும் போது பணம் இன்னும் விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் பெருகும்.

இதையும் படிக்கலாமே: துயரம் தீர்க்கும் சமயபுர மாரியம்மன் மந்திரம்

இந்த பூஜை செய்யும் போது குரு காயத்ரி மந்திரம் தெரிந்தவர்கள் அதையும் பாராயணம் செய்யுங்கள் நல்ல பலனை பெறலாம். கொடுத்த பணத்தை திரும்ப பெரும் இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -