துயரம் தீர்க்கும் சமயபுர மாரியம்மன் மந்திரம்

samaiyapuramariyaman manthiaram
- Advertisement -

மனிதனின் வாழ்க்கையே துன்பங்களும் துயரங்களும் நிறைந்து தான். அப்படியான இந்த வாழ்க்கை வாழ்வதே தினம் தினம் போராட்டம் தான் இருக்கிறது. இந்த போராட்டத்தில் போராடி வெற்றி காண்பது தான் மனிதன் தன்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையே. இதை சொல்லும் போது வேண்டுமானால் எளிமையாக இருக்கலாம். ஆனால் இதை கடப்பது என்பது அத்தனை சாதாரணமான விஷயம் கிடையாது. இத்தகைய துன்பக்கடலை கடந்து தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதை ஓரளவிற்கு தான் நம்மாலும் தாங்கிக் கொள்ள முடியும். இந்த துன்பங்களும் நம்மால் தாங்க முடியாத போது தெய்வத்தின் மீது தான் அந்த பாரத்தை இறக்கி வைப்போம். அப்படி நம்முடைய துன்பத்திலிருந்து காக்கக் கூடிய தெய்வத்தை பற்றியும், அந்த தெய்வத்தை எந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் உடனே நம்முடைய துன்பங்கள் அகலும் என்பதையும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துன்பங்கள் தீர வழிபாடு

சில நேரங்களில் நம்மையும் மீறி துன்பங்கள் நம்மை ஆட் கொள்ளும் போது நாம் யாரிடம் சென்று ஆறுதல் அடைவது என்று தவிக்கும் சமயத்தில் நம்மை காக்கக் கூடிய தெய்வமாக இருப்பவர் தான் சமயபுர மாரியம்மன். அந்த அம்மனை நினைத்து நாம் சொல்லும் இந்த ஒரு மந்திரமானது நம்முடைய வாழ்க்கையே மாற்றக் கூடிய அற்புதத்தை நிகழ்த்தும் என்று சொல்லப்படுகிறது.

இந்த மந்திரத்தை சொல்லத் தொடங்குவது எந்த நாளில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். தினமும் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வீட்டில் குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த விளக்கின் முன் அமர்ந்து முதலில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் க்ரீம் நமக

என்ற பீஜ மந்திரத்தை 9 முறை சொல்லுங்கள். இந்த மந்திரத்தை சொல்லும் போதே உங்களுக்குள் இருந்த துன்பங்கள் கரைந்து போல ஒரு உணர்வு தோன்றும். அடுத்து சமயபுரம் மாரியம்மனை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தையும் சொல்லுங்கள்.

ஓம் சித்ராயை நமக

என்ற இந்த மந்திரத்தை 16 முறை சொல்ல வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ந்து செய்யும் போது நம்முடைய துன்பகள் அனைத்தையும் இந்த அம்மன் நிச்சயமாக தீர்த்து வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க மந்திரம்

இந்த சமயபுரம் மாரியம்மன் சப்த மாதாக்களின் தன்மையை தன்னுள் நிறைத்து கொண்டவள். அத்தகைய தாயானவள் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக் கூடிய துன்பங்களையும், துயரங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவள். இந்த அன்னையை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திர வழிபாட்டை செய்பவர்களுடைய வாழ்க்கையில் துன்பம் தீருவதுடன் தன லாபம், யோகம் என அனைத்தையும் வாரி வழங்குவாள்.

- Advertisement -