பணம் வீட்டில் தங்க இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுங்கள்.

money attaction
- Advertisement -

பணம் என்ற ஒற்றை வார்த்தை இன்று பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கிறது. பணம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதுவும் பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கும் அளவுக்கு பணம் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால் பணம் இன்றி இன்றைய காலக்கட்டத்தில் ஒரு அணுவும் அசையாது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள தான் வேண்டும்.

அத்தகைய பணமானது நம்மிடம் தடை இன்றி வந்து சேரவும், வந்த பணம் வீண்விரயம் ஆகாமல் பல மடங்கு பெருகிக் கொண்டே செல்லவும் பல தாந்த்ரீக முறைகள் உள்ளது. அதில் ஒன்று தான் பணத்தை நாம் எப்படி வைக்க வேண்டும். எதனுடன் வைத்தால் அது பலமடங்கு பெருகும் என்பது. இதை பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணத்துடன் சேர்த்து வைக்க வேண்டிய பொருள்

பணம் நம் வீட்டில் எங்கு வைத்தாலும் சரி அதன் அருகில் பணத்தை ஈர்க்கக் கூடிய பொருள்களை கட்டாயமாக வைக்க வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் பணத்தை ஈர்க்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளது அதில் சிலவற்றை நாம் எப்போதும் பணத்துடன் வைக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு போன்ற சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களையும், அரகஜா, புனுகு, கோரோசனை, கருங்காலிக் கட்டை, கருங்காலி மாலை போன்ற தெய்வீக பொருட்களையும் எப்போதும் பணத்தின் அருகில் இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி கோவில்களில் பிரசாதமாக தரப்படும் வில்வ இலை துளசி இலை போன்றவற்றை பணத்துடன் சேர்த்து வைக்கவும்.இந்த இலைகள் காய்ந்தவுடன் மாற்றி விட வேண்டும்.

- Advertisement -

அதே போல் கோவில்களில் கொடுக்கப்படும் குங்குமம் விபூதி போன்ற பிரசாதனங்களையும் பணத்தின் அருகில் வைக்கலாம் நாமும் தினமும் நெற்றியில் இட்டுக்கொண்டு வரலாம்.
மேலும் பணம் நகை இரண்டையும் ஒன்றாக இருப்பது போல் பார்த்துக் கொள்ளலாம் அவை இரண்டையும் மஞ்சள் அல்லது பச்சை நிற துணியில் வைத்து எடுக்க பழகுங்கள். அது மட்டும் இன்றி பணத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தாயார், பெருமாள், குபேரர், போன்றவருடைய படங்களை பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம்.

பணத்துடன் வைக்கக் கூடாத பொருள்
பணம் சேர எப்படி சில பொருட்களை அருகில் வைக்க வேண்டுமோ, அதே போல் சில பொருட்களை எப்போதும் பணத்தின் அருகில் வைக்க கூடாது. அது பணத்தை தன்மையை முற்றிலுமாக குறைப்பதுடன் பணம் வீண் விரையும் ஆகவும் காரணமாகும். எந்தெந்த பொருட்கள் என்பதை பார்க்கலாம்.

- Advertisement -

பணத்தின் அருகில் எப்போதும் எண்ணெய் சம்பந்தமான பொருட்களை வைக்கக் கூடாது. பீரோவில் பணம் வைப்பவராக இருந்தால் அதன் அருகில் மருந்து சீட்டு, அடகு சீட்டு சிலர் கடன் வாங்க பத்திரத்தை எழுதிக் கொடுத்திருப்பார்கள் இது போன்ற விஷயங்களை பணத்தின் அருகில் வைக்க கூடாது. அது மட்டுமின்றி ஊசி கத்திரிக்கோல், கத்தி, போடாத கடிகாரம் போன்ற இரும்பு தொடர்பான பொருட்களையும் பணத்தின் அருகில் வைக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நாம் என்னதான் பாடுபட்டு சம்பாதித்தாலும் கூட அந்த பணம் நம்மிடம் நிலையாக தங்கவும், பெருகவும், வீண்விரயம் ஆகாமல் இருக்கவும் நாம் சில விஷயங்களை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி பலன் அடையலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -