பணம் பெருக அமாவாசை பரிகாரம்

kuberar amavasai
- Advertisement -

இந்த மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதில் வரக்கூடிய ஒவ்வொரு திதி, நட்சத்திரங்கள் என அனைத்திற்குமே தனித்தனி பலன்கள் உண்டு. அந்த வகையில் நாளை வியாழக்கிழமை அமாவாசை வருகிறது. இது குபேர அமாவாசையாக போற்றப்படுகிறது. பொதுவாக அமாவாசை தினத்திற்கு என்று தனி சிறப்புகள் உண்டு.

அதிலும் இந்த அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தியும் இணைந்து வந்திருப்பது மேலும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் நாளை வரக் கூடிய இந்த குபேர அமாவாசையில் பண வரவிற்கு நாம் செய்யக் கூடிய இந்த பரிகாரம் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணம் பெருக குபேர அமாவாசையில் செய்ய வேண்டியது

இந்த பரிகாரமானது நாளைய தினத்தில் நாம் பார்க்க வேண்டிய ஒரு பொருளை பற்றியது தான். இந்த பரிகாரமானது ஒரு பண ஈர்ப்பு தன்மை உடையது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் நாம் எந்த ஒரு பொருளையும் காரியத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் கூர்ந்து கவனிக்கும் போது அது நம்மளுடைய மூளையின் வலது புறத்தில் பதிந்து விடும்.

நம்முடைய மூளையின் வலது புறத்திற்கும்,ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கு படியும் இந்த எண்ணமானது நம்மை மேலும் மேலும் வளர்க்கும் விதமாக செயல்படும். அந்த வகையில் நாளை குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கப்படும் இந்த பொருள் நம்முடைய பணத்தை ஈர்க்கும் தன்மையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

நாளை ஜனவரி மாதம் 11-ம் தேதி. இந்த நாளுக்கென்று தனி சிறப்பு உண்டு. அதாவது 11 .1 இதை கூட்டினால் மூன்று. இதுவே ஒரு அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. நாளை வியாழக்கிழமை குபேரருக்கு உகந்த நாள். அது மட்டும் இன்றி அமாவாசை திதியும் உள்ளது. குபேரருக்கு அமாவாசை திதியும் மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் தீபாவளியில் செய்யும் குபேர பூஜையும் அமாவாசை திதியில் தான் செய்வோம். இவற்றுடன் இணைந்து அனுமனுக்கு உகந்த அனுமன் ஜெயந்தியும் உள்ளது.

இத்தகைய சக்தி வாய்ந்த இந்த நாளில் நாம் பார்க்கக் கூடிய பொருள் என்னவெனில் அது குபேர எந்திரம். இதை நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரம் 4 மணி முதல் மாலை 6:30 மணி வரை அதாவது அமாவாசை திதி முடியும் முன் பார்த்து விட வேண்டும். ஏதேனும் ஒரு பத்து நிமிடங்கள் இந்த படத்தை பார்த்து உங்கள் மனதுக்குள் நன்றாக பதிய வைக்க வேண்டும். அந்த நேரத்தில் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதிலும் குபேர வழிபாட்டில் வரக்கூடிய நேரமான மாலை 5 லிருந்து 6:30 மணிக்குள் இந்த குபேர எந்திரத்தை பார்த்தால் அது மேலும் பலனை தருவதாக அமையும். மாலை 6.30 மணிக்கு மேல் அமாவாசை திதி முடிந்து விடுகிறது. ஆகையால் முடிந்த வரையில் அதற்குள்ளாக இந்த எந்திரத்தை பார்த்து விடுங்கள். இது கேட்பதற்கு சாதாரண எளிய பரிகாரமாக இருக்கும். ஆனால் இதனுடைய பலன் பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செல்வம் நிலைக்க வெள்ளிக்கிழமை பரிகாரம்

பண வரவை அதிகரித்து தரக்கூடிய இந்த பண தீர்ப்பு பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின், நம்பிக்கையுடன் நாளைய நாளை தவற விடாமல் பயன்படுத்தி பலன் அடையலாம் என்று இந்தக் கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -