முருகனின் இந்த மந்திரத்தை 48 நாட்கள் உச்சரித்தால் நினைத்தது நடக்கும்.

murugan6
- Advertisement -

இந்த கலியுகத்தில் மனிதர்களுடைய வாழ்க்கை போராட்டத்தோடு தான் தினம் நகர்ந்து செல்கின்றது. எந்த ஒரு வேலையை தொட்டாலும் பிரச்சனை. யாரிடம் பேசினாலும் பிரச்சனை, பணம் வந்தாலும் பிரச்சனை, பணம் இல்லை என்றாலும் பிரச்சனை, இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வது என்பதே பெரிய சவாலாக உள்ளது.

நம்பிக்கை துரோகம், ஏமாற்றுவது, கூட இருந்தே குழி பறக்கும் நண்பர்கள், உறவுகளே துரோகம் செய்கிறது. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்க்கையில் எதிலும் வெற்றி காண முடியாமல் கஷ்டப்படுபவர்கள் முருகப்பெருமானை தினமும் இப்படி வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டமான சூழ்நிலை மாறி நிம்மதி பெறலாம். இந்த முருகப்பெருமான் வழிபாடு உங்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றியையும் தேடித் தரும்.

- Advertisement -

வெற்றி பெற முருகப் பெருமான் வழிபாடு

தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, திருச்செந்தூர் முருகப் பெருமானை மனதில் நினைத்து ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி, என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்யுங்கள். அதன் பிறகு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை மனமுருக நம்பிக்கையுடன் 108 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான வெற்றி தரும் முருகன் மந்திரம் இதோ.

ஓம் முருகா, குரு முருகா,
அருள் முருகா, ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே
ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

- Advertisement -

இது ஒன்றும் சாதாரண மந்திரம் கிடையாது. அகத்திய முனிவரால் சொல்லப்பட்ட முருகன் மந்திரம். இந்த மந்திரத்தை தினம்தோறும் நீங்கள் உச்சரித்து வர உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் மனதில் எந்த கோரிக்கையை வைத்து இந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ அது நல்லபடியாக நடக்கும். அதிலும் திருச்செந்தூர் முருகன் என்றால் அதனுடைய அடையாளம் வெற்றி தான்.

இந்த மந்திரத்தை உச்சரித்து வரும்போது இந்த 48 நாட்களுக்குள் அந்த முருகப்பெருமான் உங்களை ஒரு முறை திருச்செந்தூருக்கு அழைத்துச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்ய வேண்டும் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றியை குவிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் எழுந்து நடக்க எளிமையான பரிகாரம்.

இன்னல்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, நிம்மதியான குடும்பம், நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும், மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த முருகர் வழிபாட்டை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை மாறும். உங்கள் வேண்டுதல் 48 நாட்களில் நிறைவேறும். வேல் வேல் வெற்றிவேல்.

- Advertisement -