அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்ட செய்ய வேண்டியது

mahalakshmi cash
- Advertisement -

நம்முடைய வாழ்நாளில் நம்மை சுற்றி இருப்பவர்களை கூர்ந்து கவனித்தால் தெரியும் சிலர் எப்போதும் கஷ்டத்துடனே இருப்பார்கள். எத்தனை உழைத்தாலும் அவர்களால் முன்னுக்கு வரவே முடியாது. குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. பணம் இல்லாமல் வறுமை நிலையிலேயே இருப்பார்கள். அதே போல் இன்னும் சிலரை பார்த்தால் அவர்கள் எப்போதும் சந்தோஷமாக செல்வ நிலையில் இருப்பார்கள்.

இதற்கெல்லாம் நாம் பொதுவாக அவர்களுக்கு என்ன அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருக்கிறது என்ற ஒரு வார்த்தையில் சொல்லி விடுவோம். அந்த அதிர்ஷ்டமானது ஒருவருக்கு எப்போதும் இருக்க வேண்டும் எனில் அவர் கடைபிடிக்கக் கூடிய செயல்கள் என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதைத் தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்

- Advertisement -

அதிர்ஷ்டம் எப்போதும் உங்கள் பக்கம் இருக்க
ஒருவர் எப்பொழுதும் நல்ல நிலைமையில் இருப்பதும் துன்ப நிலைக்குப் போவதும் அவர்களுடைய உழைப்பு அவர்களுடைய நேரம் இது எல்லாமும் ஒரு காரணம் தான். ஆனாலும் அவர்கள் வாழ்வியலில் கடைபிடிக்கும் ஒரு சில வழக்கங்கள் அவர்களுடைய நிலைமை என்னாலும் மேன்மையாக வைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதில் ஆன்மீக ரீதியாக என்னென்ன விஷயங்களை நாம் தினமும் கடைபிடிக்க வேண்டும் என்பதை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். முதலில் நாம் காலையில் கண் விழித்தவுடன் பார்க்கும் பொருட்களில் இருந்து இதை தொடங்க வேண்டும். நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் படம், தண்ணீர் நிரம்பிய தொட்டி நம்முடைய உள்ளங்கையை தாயாரை நினைத்துக் கொண்டு பார்ப்பது போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் .

- Advertisement -

இவை மட்டுமின்றி ஓடும் குதிரை மயில் போன்ற படங்களை பார்ப்பது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். பெண்கள் தினமும் நெற்றிக்கு குங்குமம் வைத்துக் கொள்வது. கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு அந்த கையை காலையில் கண் விழித்ததும் பார்ப்பது இதெல்லாம் சுப சகுனங்களாக கருதப்படுகிறது.

அதே போல் வீட்டை விட்டு வெளியே வேலை நிமித்தமாக சொல்லும் போது நம் வீட்டில் இருக்கும் மனைவி குழந்தை தாய் தந்தையர் இப்படி யாரேனும் ஒருவர் முன் வர சொல்லி தான் கிளம்ப வேண்டும். இதற்கு காரணம் அவர்களுக்காக தான் நாம் உழைக்கிறோம் என்ற எண்ணம் நம் மனதிற்குள் வரும். அது இன்னும் நம்மை உத்வேகத்துடன் உழைக்க வைக்கும். இதை செய்யும் போது அவர்களும் இதை போன்ற எண்ணத்துடன் முழு மனதாக செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல் வீட்டிற்கு கொண்டு வரும் வருமானத்தை பிள்ளைகள் கையிலோ அல்லது மனைவியின் கையிலே கொடுத்து பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு வாங்கினால் அது பல மடங்கு பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி புதிதாக நகைகள் வாங்கினாலும் பொருட்களை வாங்கினாலும் வீட்டில் இவர்கள் கையில் கொடுத்து மறுபடியும் வாங்கும் போது அது பல மடங்கு பெருகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

தாய் தந்தையர் உங்களுடன் இருந்தால் நிச்சயம் வெளியில் செல்லும் போது அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதே போல் நம் வீட்டில் இறந்த மூதாதையர்களும் புகைப்படம் இருந்தால் அவர்களையும் வெளியில் செல்லும் போது வணங்கி செல்ல வேண்டும். அவர்களை மனதார நினைத்து இன்று நாம் செல்லும் காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செல்ல வேண்டும்.

இது அதிர்ஷ்டத்தை மட்டுமின்றி நம் மனதிலும் நம் குடும்பத்தாரின் மனதிலும் நம் குடும்பம் முன்னேற வேண்டும் வருமானம் பெறுக வேண்டும் என்ற எண்ணங்கள் பெருகிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்று சொல்லப்படுகிறது. இவை யாவும் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டவை தான்.

இதையும் படிக்கலாமே: அர்ச்சனை பூக்களும் அதன் பலன்களும்

இதில் புதிதாக நாம் பின்பற்றக் கூடிய விஷயங்கள் எதுவும் கிடையாது. இந்த ஆன்மீக குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதைப் பின்பற்றி பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -