பணம் தேவையில்லாமல் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால். இவர்களிடம் ஒரு முறை பணத்தை கொடுத்து வாங்குங்கள். இனி ஒரு ரூபாய் கூட உங்க கையில இருந்து அனாவசியமாக செலவு ஆகாவே ஆகாது.

- Advertisement -

எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே இல்லை என்ற புலம்பல் என்ற அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் நம் கையில் இருக்கும் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்றும் அதற்கு தேவை உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ளாமல் செலவு செய்யவது தான். இது ஒரு புறம் இருந்தாலும் நம் கையில் பணம் வருவதற்கு முன்பாகவே அது செலவழிப்புக்கான காரணங்களும் நமக்கு முன்பாக வந்து விடும். இது போல நிகழாமல் இருக்க இந்த எளிய தாந்த்ரீக முறைகளை கடைப்பிடிக்கலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

முதலில் இதை யார் செய்ய வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ளலாம். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அனைவருமே பணத்தை செலவழிக்க மாட்டார்கள். யாரோ ஒருவர் கையில் தான் பணம் தாங்காமல் செலவழிந்து கொண்டே இருக்கும். அந்த நபரின் கையால் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது தான் முக்கியம்.

- Advertisement -

பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை நல்ல நாள், அல்லது புதன் வியாழன் போன்ற நாட்களில் செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாளில் நல்ல நேரத்தை பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு தெரிந்து உண்மையிலே சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் துன்பப்படுபவர்களுக்கு உங்கள் கையால் ஒரு சிறிய தொகையை தானமாக கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு பணத்தை தான் தானமாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்காக தான் இதை செய்கிறோம். எனவே பணத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் வேறு எந்த பொருளையும் வாங்கிக் கொடுக்கக் கூடாது.

இதே போல வாழ்க்கையில் நியாயமாக நடப்பவர்கள், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படி தான் வாழ வேண்டும் என்று நேர்மையுடன் இருப்பவர்கள், இப்படி நல்லவர்கள் என்று உங்கள் மனதிற்கு யார் தோன்றுகிறார்களோ அவர்கள் கையால் இதே போலதொரு நல்ல நாளில் நல்ல நேரத்தில் சிறு தொகையை பணத்தை நீங்கள் தானமாக பெற வேண்டும். இப்படி யாரும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் சிவயோகிகள் சித்தர்கள் போன்றவர்கள் இடத்தில் இருந்து பெறலாம்.

- Advertisement -

நீங்கள் திடீரென சென்று ஒருவரிடம் பணம் கேட்டால் தர மாட்டார்கள். எனவே நீங்கள் யாரிடம் பணம் வாங்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்த பிறகு அவர்களிடம் இந்த பரிகாரத்தை செய்வதற்கு இது போல நீங்கள் ஏதாவது ஒரு சிறு தொகையை எனக்கு தாருங்கள் என்று நீங்கள் முன் கூட்டியே கேட்டு வைத்து விடுங்கள். பணம் என்றால் பெரியதாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை ஒரு ரூபாயாக இருந்தால் கூட போதும்.

இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்பது கணக்கு எல்லாம் கிடையாது. நீங்கள் கொடுப்பதும் சரி வாங்குவதும் சரி உங்களுக்கு தோன்றும் பொழுது செய்யலாம் ஆனால் கொடுத்து வாங்கும் நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும் இருந்தால் மிகவும் முக்கியம்.

இதையும் படிக்கலாமே: வாஸ்துபடி கிச்சனில் இந்த ஒரு பொருளை மட்டும் தெரியாமல் கூட வைத்து விடக்கூடாது ஆபத்து வரும் தெரியுமா?
இந்த பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்யும் போது நம்மையும் அறியாமல் நம் கையில் இருந்து வீணாக செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பணம் வீண் செலவு ஆகவில்லை என்றாலே பணம் சேர்கிறது என்று தான் அர்த்தம். பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் செலவழித்து நல்லதொரு வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

- Advertisement -